விஜய்யின் நெல்லை பிரச்சாரத்திற்கு அனுமதி! 51 நிபந்தனைகள் விதிப்பு!

Vijay
Vijay
Updated on

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நாளை(ஏப்ரல்.8) நெல்லையில் பிரச்சாரம் செய்வதற்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. இதற்காக 51 நிபந்தனைகளை பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. விஜய்க்கு மட்டும் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக அந்த கட்சியின் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அவர் , விஜயின் பெயரால் தன்னைப் போன்ற  அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் தவெகவின் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்கள். இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவரின் ஆதரவும் தலைவர் விஜய்க்கு உள்ளது. அத்தனை பேரும் தமிழகத்தில் புதிய மாற்றம் வர வேண்டும் என்று விரும்புகின்றனர்.

மற்ற கட்சிகளுக்கெல்லாம் எந்த அளவுக்கு நிபந்தனைகள் வைக்கப்படுகிறது என்று எங்களுக்கு தெரியும். அவர்கள் என்னென்ன நிபந்தனைகளை பின்பற்றி பரப்புரை மேற்கொள்கிறார்கள் என்பதும் அனைவருக்கும் தெரியும். எங்களுக்கு மட்டும் நிறைய தடைகளை விதித்துக் கொண்டே வருகிறார்கள்.

 நிபந்தனைகளுக்கு உட்பட்டு நெல்லையில் பொதுக்கூட்டம் நடத்தப்படும் , விஜயின் பரப்புரைக்கு ஏராளமான தடைகள் வைக்கப்படுகிறது , சென்னை தவிர மற்ற இடங்களில் பெரிய அளவில் பிரச்சினை எதுவும் இல்லை. என்று செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

இதையும் படியுங்கள்:
மண்ணெண்ணெய் ஏன் நீல நிறத்தில் இருக்கிறது? - இதன் பின்னணியில் உள்ள 'சாய' ரகசியம் இதுதான்!
Vijay
logo
Kalki Online
kalkionline.com