ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் பின்தொடரத் தொடங்கியுள்ளார்.ட்விட்டரில் அதிகம் பேர் பின் தொடரும் தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடியும் இருக்கிறார். ட்விட்டர் அதிபர் எலான் மஸ்க், ட்விட்டரில் பின்தொடரும் மிகச்சில உலகத் தலைவர்களில் ஒருவராக மோடியும் இணைந்திருக்கிறார்.
ட்விட்டரில் புதிதாக பிரதமர் மோடியைப் பின்தொடரும் 150 பேரின் ஸ்க்ரீன்ஷாட் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் ட்விட்டர், ஸ்பேக்ஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் உரிமையாளரும் உலகின் நம்பர் 2 பணக்காரருமான எலான் மஸ்கின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் அவரை எலான் மஸ்க் பின் தொடர ஆரம்பித்துள்ளார்.இந்தத் தகவலை எலான் அலர்ட்ஸ் என்ற ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பக்கத்தில் எலான் மஸ்கின் ட்வீட்கள் அனைத்தையும் கண்காணித்து அதனை உடனுக்குடன் பிரபலப் படுத்துகின்றனர்.
ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடியை எலான் மஸ்க் பின் தொடர ஆரம்பித்துள்ளது பேசுபொருள் ஆகியுள்ளது. சிலர் இதனை வரவேற்றுள்ளனர். இதனால் விரைவில் டெஸ்லா கார் இந்தியாவுக்கு வரக்கூடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.
எலான் மஸ்க் கடந்தாண்டு அக்டோபரில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார். உலகின் பெரும் பணக்காரர்களில் இரண்டாவது இடத்தில் இருக்கும் எலான் மஸ்க், ட்விட்டரை வாங்கியது முதலே தினம் ஒன்றாக பல்வேறு அதிரடிகளை குவித்து வருகிறார். ட்விட்டரில் எலான் மஸ்க் மேற்கொள்ளும் ஒவ்வொரு நகர்வுகளும் கவன ஈர்ப்பை பெறுவதுண்டு.
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் அதிபரான எலான் மஸ்க், பின் தொடர்வோர் எண்ணிக்கையில்(134.3 மில்லியன்) முதலிடத்தில் இருக்கிறார். அடுத்த இடத்தில் பராக் ஒபாமா வருகிறார். இந்த வரிசையில் 8 வது இடத்தில் இருப்பவர் இந்திய பிரதமர் மோடி (87.7 மில்லியன்). எலான் மஸ்க் மொத்தம் 195 நபர்களை மட்டுமே ட்விட்டரில் பின் தொடர்கிறார். தற்போது அவர்களில் ஒருவராக மோடியும் சிறப்பு பெற்றிருக்கிறார்.