இந்த முதலமைச்சருக்கு வாஸ்துதான் உயிர் மூச்சு!

இந்த முதலமைச்சருக்கு வாஸ்துதான் உயிர் மூச்சு!
S CHANDRA MOULI

எஸ். சந்திர மௌலி (S Chandra Mouli) எஸ். சந்திர மௌலி கடந்த நாற்பதாண்டுகளாக கல்கி குழும பத்திரிகைகளில் எழுதிவரும் மூத்த பத்திரிகையாளர். கல்கி வெளியிட்ட பல்வேறு சிறப்பிதழ்கள், மற்றும் தீபாவளி மலர்கள், தொழில் மலர்கள், விடுமுறை மலர்களுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்தவர். 2008ல் கல்கி வெளியிட்ட “குஜராத் டுடே” சிறப்பிதகளுக்காக ஒரு வார காலம் குஜராத் முழுவதும் பயணித்து, குஜராத்தின் வளர்ச்சியை நேரில் கண்டு, எழுதியவர். சமூக அக்கறையோடு கல்கி மேற்கொண்ட “மாதம் ஒரு மாவட்டம்” திட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணித்து பங்களித்தவர். வாஜ்பாய், வி.பி.சிங் தொடங்கி மன்மோகன் சிங், நரேந்திர மோடி வரை ஏழு இந்தியப் பிரதமர்களை சந்தித்து பேட்டி கண்டவர். எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, என்.டி.ஆர், ஜோதி பாசு, வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், சிவாஜி கணேசன், ரஜினி காந்த், கமலாசன், ஜெமினிகணேசன், சூர்யா, மணிரத்னம், கிரிக்கெட்டர் ஸ்ரீக்காந்த், விக்கு வினாயகராம். உமையாள்புரம் சிவராமன், வயலின் கன்யாகுமரி, ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் மு.மேத்தா, நா. முத்துகுமார், சோ ராமசாமி என பல்துறைப் பிரபலங்களையும் பேட்டி கண்டு எழுதியவர். இயக்குனர் ஸ்ரீதர், நடிகர் நாகேஷ், ஓவியர் கோபுலு, இயக்குனர் எஸ்பி. முத்துராமன், திருமதி ஒய்,ஜி.பி. ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், நடிகர் ஏ.ஆர்.எஸ். மெஜிக் நிபுணர் லால் உள்ளிட்ட பலரது வாழ்க்கை அனுபவங்களை இவர் தொடராக எழுதி, அவை பின்னர் புத்தகங்களாக வெளியாகி உள்ளன. இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானபோது, இளைய தலைமுறையினருக்கு அமரர் கல்கி பன்முகச் சாதனை வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் “கல்கி-பொன்னியின் செல்வர்” என்ற தலைப்பில் அவரது வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியவர். பெண்சிசுக் கொலை தொடர்பான கட்டுரைக்கு “லாட்லி விருதும்”, ரோட்டரி சங்கத்தின் “சாதனை விருதும்” பெற்றவர். தற்போது madraspaper இணைய வார இதழில் “ஓரு குடும்பக் கதை: என்ற தலைப்பில் இந்திய அரசியலில் நேரு குடும்பத்தின் பங்களிப்பு குறித்த நெடுந்தொடர் ஒன்றை எழுதி வருகிறார். சோ குறித்த ஒரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்.

Updated on

ஒன்று பட்ட ஆந்திர மாநிலத்திலிருந்து தெலுங்கானாவை தனி மாநிலமாகப் பிரிக்க வேண்டும் என்று போராடி, வெற்றி பெற்று, தெலங்கானா மாநிலம் உருவாவதற்கு முழு முதல் காரணமானவர் தற்போதைய தெலங்கானாவின் முதலமைச்சராக இருக்கும் சந்திர சேகர ராவ்.

அவரால், தனது தாய் மாநிலமான ஆந்திராவிலேயே காலூன்ற முடியவில்லை. ஆனாலும், அவருக்கு அகில இந்திய அரசியலில் மிகுந்த ஆர்வம் உண்டு. தன் தலைமையில் பா.ஜ.க., காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி ஒன்றை உருவாக்க வேண்டும் என்று சில காலமாக முயற்சி செய்து வருபவர். ஆகவேதான், தெலங்கானா ரஷ்டிர சமிதி என்ற தனது கதியின் ஒரிஜினல் பெயரைக் கூட “ பாரத் ராஷ்டிர சமிதி” என மாற்றினார்.

தெலங்கானாவுக்கு வெளியில் தனது கட்சியைக் காலூன்றச் செய்வதற்கு அவர் பெரிதும் முயற்சிக்கிறார் என்பது ஒரு பக்கம் என்றால், டெல்லியில் தனது கட்சிக்கு ஒரு அலுவலகம் இருக்கவேண்டும் அப்போதுதான் தேசியத் தலைவர்கள் பார்வை தன் மீது படும் என்பது இவரது நம்பிக்கை.

இதற்காக அவர் என்ன செய்திருக்கிறார் தெரியுமா?

தலைநகர் டெல்லியில் வசந்த் விஹார் பகுதியில் தனது கட்சி அலுவலகத்துக்காக ஒரு பெரிய கட்டிடம் கட்டி, இருக்கிறார். இந்த நான்கு மாடிக்கட்டிடம் பதினோராயிரம் சதுர அடி கொண்டது. சந்திர சேகர ராவ், வாஸ்து சாஸ்திரத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர் என்பதால், வாஸ்து நிபுணர்களைக் கலந்தாலோசித்து இந்த புதிய கட்டிடம் முழுக்க, முழுக்க வாஸ்து சாஸ்திர அடிப்படையில் கட்டி இருக்கிறார்.

அண்மையில் அந்தக் கட்டிடத்தை வாஸ்து சாஸ்திர நிபுணர் குறித்துக் கொடுத்த தினத்தில், வேத மந்திரங்கள் ஒலிக்க, சரியாகப் பகல் ஒரு மணி ஐந்து நிமிடத்துக்கு, ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார் ராவ். ரிப்பன் வெட்டிய கையோடு, வாஸ்து நிபுணரது ஆலோசனைப்படி தனது வலது காலை எடுத்து வைத்து, உள்ளே நுழைந்தார்.

டெல்லியில் புதிய அலுவலகம் திறந்த வேளை, வரும் சட்ட மன்றத் தேர்தலில் மட்டும் இல்லாமல் பாராளுமன்றத் தேர்தலிலும் உங்களுக்கு அமோக வெற்றி கிடைக்கும்” என்று திட்டவட்டமாகக் கூறி இருக்கிறார்களாம் அவருக்கு நெருக்கமான வாஸ்து எக்ஸ்பர்ட்கள்!

எல்லாம் வாஸ்து மயம்!

logo
Kalki Online
kalkionline.com