#BREAKING : சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சார குழுவை அமைத்து தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

Thalapathy Vijay
Thalapathy Vijay
Updated on

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு 10 பேர் கொண்ட குழுவை அமைத்து தவெக தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து வெளியான அறிக்கையில், தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, மாநில, மாவட்ட தொகுதி அளவிலான தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொள்ள, பின்வரும் முறையில், தேர்தல் பிரசாரக் குழு அமைக்கப்படுகிறது.

தேர்தல் பிரசாரக் குழு விவரம்:

1. திரு. N.ஆனந்த்

2. திரு. ஆதவ் அர்ஜுனா I.A.

3. திரு. K.A.செங்கோட்டையன்

4. திரு. A.பார்த்திபன்

5. திரு. B.ராஜ்குமார் DME

6.திரு. K.V.விஜய் தாழு

7.திரு. S.P.செல்வம் DCE

8. திருமதி பிச்சைரத்தினம் கரிகாலன்

9. திரு. M.செரவு மைதின் (எ) நியாஸ்

10. திருமதி. J.கேத்ரின் பாண்டியன் M.A... B.Ed.

மேற்கண்ட குழு. 234 தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள். பிரசாரக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்துவது தொடர்பான பணிகளை மேற்கொள்ளும். இக்குழுவிற்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

logo
Kalki Online
kalkionline.com