மக்களை கவர்ந்த "மனதின் குரல்" நிகழ்ச்சி!

மக்களை கவர்ந்த "மனதின் குரல்" நிகழ்ச்சி!
S CHANDRA MOULI

எஸ். சந்திர மௌலி (S Chandra Mouli) எஸ். சந்திர மௌலி கடந்த நாற்பதாண்டுகளாக கல்கி குழும பத்திரிகைகளில் எழுதிவரும் மூத்த பத்திரிகையாளர். கல்கி வெளியிட்ட பல்வேறு சிறப்பிதழ்கள், மற்றும் தீபாவளி மலர்கள், தொழில் மலர்கள், விடுமுறை மலர்களுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்தவர். 2008ல் கல்கி வெளியிட்ட “குஜராத் டுடே” சிறப்பிதகளுக்காக ஒரு வார காலம் குஜராத் முழுவதும் பயணித்து, குஜராத்தின் வளர்ச்சியை நேரில் கண்டு, எழுதியவர். சமூக அக்கறையோடு கல்கி மேற்கொண்ட “மாதம் ஒரு மாவட்டம்” திட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணித்து பங்களித்தவர். வாஜ்பாய், வி.பி.சிங் தொடங்கி மன்மோகன் சிங், நரேந்திர மோடி வரை ஏழு இந்தியப் பிரதமர்களை சந்தித்து பேட்டி கண்டவர். எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, என்.டி.ஆர், ஜோதி பாசு, வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், சிவாஜி கணேசன், ரஜினி காந்த், கமலாசன், ஜெமினிகணேசன், சூர்யா, மணிரத்னம், கிரிக்கெட்டர் ஸ்ரீக்காந்த், விக்கு வினாயகராம். உமையாள்புரம் சிவராமன், வயலின் கன்யாகுமரி, ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் மு.மேத்தா, நா. முத்துகுமார், சோ ராமசாமி என பல்துறைப் பிரபலங்களையும் பேட்டி கண்டு எழுதியவர். இயக்குனர் ஸ்ரீதர், நடிகர் நாகேஷ், ஓவியர் கோபுலு, இயக்குனர் எஸ்பி. முத்துராமன், திருமதி ஒய்,ஜி.பி. ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், நடிகர் ஏ.ஆர்.எஸ். மெஜிக் நிபுணர் லால் உள்ளிட்ட பலரது வாழ்க்கை அனுபவங்களை இவர் தொடராக எழுதி, அவை பின்னர் புத்தகங்களாக வெளியாகி உள்ளன. இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானபோது, இளைய தலைமுறையினருக்கு அமரர் கல்கி பன்முகச் சாதனை வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் “கல்கி-பொன்னியின் செல்வர்” என்ற தலைப்பில் அவரது வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியவர். பெண்சிசுக் கொலை தொடர்பான கட்டுரைக்கு “லாட்லி விருதும்”, ரோட்டரி சங்கத்தின் “சாதனை விருதும்” பெற்றவர். தற்போது madraspaper இணைய வார இதழில் “ஓரு குடும்பக் கதை: என்ற தலைப்பில் இந்திய அரசியலில் நேரு குடும்பத்தின் பங்களிப்பு குறித்த நெடுந்தொடர் ஒன்றை எழுதி வருகிறார். சோ குறித்த ஒரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்.

Updated on

பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும் வானொலி மூலமாக நாட்டு மக்களிடம் ஆற்றும் “மன் கி பாத்” என அழைக்கப்படும் மனதின் குரல் நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் 30 ம் தேதியுடன் 100வது பகுதியை வெற்றிகரமாக எட்டியது.

இந்நிலையில், பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி மக்களிடம் எந்தளவுக்கு வரவேற்பினை பெற்றுள்ளது தொடர்பாக "Institute for Competitiveness" என்ற நிறுவனம் சார்பில் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில், பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி எப்படி உள்ளது என்ற கேள்விக்கு 47.5% பேர் மிகவும் நன்றாக உள்ளது என்றும், 25% பேர் நன்றாக உள்ளது என்றும், 13% சுமார் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

“மனதின் குரல் நிகழ்ச்சி எப்படிப்பட்ட நிகழ்ச்சி? என்ற கேள்விக்கு 33% பேர் பொது மக்கள் தொடர்பான விஷயங்களைப் பேசும் நிகழ்ச்சி என்றும், 8% பேர் வீடு மற்றும் குடும்பம் தொடர்பான விஷயங்களைப் பேசும் நிகழ்ச்சி என்றும், 2% பேர் சாதனையாளர்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் நிகழ்ச்சி என்றும், 2% பேர் இந்தியப் பிரதமர், வெகு அன்னியோன்னியமான குரலில், நம்முடன் பேசுவது போன்ற நிகழ்ச்சி என்றும், 39% பேர் இவை அனைத்துமே கொண்ட நிகழ்ச்சி என்றும் கருத்து கூறியுள்ளனர்.

பிரதமரின் பேச்சு வழக்கு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? என்ற கேள்விக்கு 81% பிடித்திருக்கிறது என்றும், 3% இல்லை என்றும், கூறியுள்ளனர்.

மனதின் குரல் நிகழ்ச்சி தொடர வேண்டுமா? என்ற கேள்விக்கு 81% பேர் தொடர வேண்டும் என்றும், 13% வேர் வேண்டாம் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com