

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை சரிபார்க்கும் பணியைத் தொடங்கியது தேர்தல் ஆணையம்.
தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் இணைந்து பணியாற்றுவார்கள். அனைத்து மாவட்டங்களிலும் வாக்குகளை சரிபார்க்கும் பணி இன்று மாலைக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
17சி படிவத்தில் பதிவான விவரங்கள், மொத்தம் பதிவான வாக்குகளை ஒப்பிட்டு பார்த்து சரிபார்க்கப்படுகின்றன. சரிபார்ப்பு பணி நிறைவடைந்த பிறகு தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் தொடர்பான புள்ளி விவரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடந்து முடிந்த தேர்தலில் மொத்தம் 4.87 கோடி வாக்குகள் பதிவாகியுள்ளன. SIR பணிகளால் 74 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்ட நிலையில், கடந்த தேர்தலை விட 24 லட்சம் வாக்குகள் கூடுதலாக பதிவானது.