வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பேரழிவு அபாயம்: இதுவரை 4 பேர் பலி , 7 பேர் காணவில்லை!

"இது இயற்கை பேரிடர் அல்ல, மனிதத் தவறு!" - வயநாடு நிலச்சரிவில் முதலமைச்சர் கொந்தளிப்பு.
Vayanadu disaster
vayanadu landslideimage credit: India today
Updated on

கேரளாவில் இன்று வயநாடு மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்ததால் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவு காரணமாக, இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர் , 7 பேர் ஒரே காணாமல் போய் உள்ளனர். மேலும் பலர் ஈடுபாடுகளில் சிக்கி உள்ளதாக அஞ்சப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் வயநாடு பகுதியில் 265 மி.மீ மழை இடைவிடாது பெய்துள்ளதால், இந்த கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து , தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கேரளத்தில் வயநாடு மற்றும் மலப்புரம் ஆகிய இரண்டு மாவட்டங்களை இணைக்கும் ,ஆனக்கோம்போயில்-மெப்பாடி சுரங்கப்பாதை சாலைத் திட்டத்திற்கான பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கல்லாடியில் உள்ள மீனாட்சி பாலம் அருகே ஏராளமாக மண் குவிக்கப்பட்டு இருந்தது. அது கனமழையின் காரணமாக சரியத் தொடங்கியதால், ஏராளமான தொழிலாளர்கள் அதில் சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடியுள்ளனர்.

உள்ளூர்வாசிகள் உடனடியாக களத்தில் இறங்கி மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். மண் சரிவிற்கு இடையில் இன்னும் சுமார் 10 பேர் அளவில் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை மீட்கப்பட்டுள்ள 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உடனடியாக கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன் அவசரக் கூட்டத்தை நடத்தினார். உடனடியாக மீட்பு மற்றும் நிவாரப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் முதலமைச்சர் "வயநாடு மாவட்டத்தில் கல்லடி சுரங்கப்பாதை அருகில் ஏற்பட்ட நிலச்சரிவில் 2 உயிர் இழந்ததாகவும் 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் , 7 பேரை காணாமல் தேடும் பணிகள் துரிதப் படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

சுரங்க பணி நடைபெறும் பகுதியிலிருந்து மண்ணை அகற்றுமாறு, மாவட்ட ஆட்சியரும் பேரிடர் மேலாண்மை ஆணையமும் ஜூன் 20 ஆம் தேதியே உத்தரவிட்டுள்ளனர். ஆனால், அந்த உத்தரவை சுரங்கப்பாதை ஒப்பந்ததாரர் கண்டு கொள்ளாத காரணத்தினால் இவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது . இந்த விபத்து மனிதத் தவறினால் உருவாக்கப்பட்ட நிலச்சரிவு என்று முதலமைச்சர் சதீசன் கூறியுள்ளார்.

Vayanadu District landslide
Vayanadu landslide Manorama online

கேரள மாநில அமைச்சர் சித்திக் கூறுகையில் "அந்த இடத்தில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக கொங்கன் ரயில்வே துறையை அதிகாரிகள் எச்சரித்திருந்ததாகவும் அவர்கள் முறையான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை "என்றும் குற்றம் சாட்டினார். மீட்கப்பட்டு சிகிச்சையில் உள்ள 6 பேர் உடல்நிலை சீராக இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இது போன்ற விஷயங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. 2 ஆண்டுகளுக்கு முன்னர் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் 298 பேர் பலியானதையும் குறிப்பிட்டு இருந்தார்.

பொதுவாகவே புவியியல் அடிப்படையில் கேரள மாநிலம் மலைகள் சூழ இருப்பதாலும் , அதிக கனமழை பெறும் இடமாக இருப்பதாலும் இங்கு நிலச்சரிவுகள் அடிக்கடி ஏற்படுகின்றன. வயநாடு முண்டக்கையில் இதற்கு முன்னர் 1984 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவில் 14 பேர் பலியாகியுள்ளனர். 1992-ஆம் ஆண்டு ஏற்பட்ட காப்பிக்களம் நிலச்சரிவில் 11 பேர் உயிரிழந்தனர். கடைசியாக 2007 ஆம் அன்று நடந்த வளம்தோடு நிலச்சரிவில் நான்கு பேர் பலியாகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com