மக்களே உஷார்..!! இனி ஜிஎஸ்டி-யில ஏமாத்துனா...உங்க பேங்க் அக்கவுண்ட்டையே முடக்கிடுவாங்க!

GST
GST
Published on

ஜிஎஸ்டி துறையிடம் பெரிய அதிகாரம் உண்டு. வரி ஏய்ப்புச் செய்ததாகச் சந்தேகம் வரலாம். அது உறுதியான உடனே உங்கள் கம்பெனி அக்கவுண்ட்டை முடக்க முடியும்.

மத்திய ஜிஎஸ்டி சட்டம், 2017-இன் பிரிவு 83 மற்றும் ஜிஎஸ்டி விதிகள் 159 ஆகியவை இதற்கான சட்டப்பூர்வ அனுமதியை வழங்குகின்றன அரசுப் பணத்தைப் பாதுகாக்கவே இந்த நடவடிக்கை. மிக அவசரமான நேரங்களில் மட்டுமே இதைச் செய்வார்கள்.

அக்கவுண்ட் ஏன் முடக்குவாங்க? என்னென்ன தப்பு நடக்குது?  

பேங்க் அக்கவுண்ட் முடங்க நிதி மோசடிகளே முக்கியக் காரணம். உதாரணமாகச் சில தவறுகள் நடக்கும். 

நீங்கள் போலியான ITC கிளைம் செய்யலாம். சரக்கே இல்லாமல் சும்மா பில் போடலாம். கஸ்டமர்கிட்ட ஜிஎஸ்டி வசூலித்து, அரசுக்குக் கட்டாமல் ஏமாற்றலாம். 

ஷெல் கம்பெனிகள் நடத்துவதும் ஒரு காரணம். ஆடிட்டிங்கில் பெரிய வித்தியாசங்கள் தெரியும். அதிகாரிகளுடன் சரியாக ஒத்துழைக்காமல் இருக்கலாம். 

இப்படிப்பட்ட தவறுகள் அரசுப் பணத்துக்கு ஆபத்து என்றால், அக்கவுண்ட் முடங்கும். DGGI போன்ற பெரிய விசாரணைப் பிரிவுகள்தான் இந்த உத்தரவுகளைப் போடும்.

முடக்குனா எப்படித் தெரியும்? என்னென்ன ஆகும்?  

அக்கவுண்ட் முடங்கினால் பேங்க் மூலம் உங்களுக்குத் தெரியும். பணம் டிரான்ஸ்ஃபர் செய்யும்போது ரிஜெக்ட் ஆகும். 

செக் எழுதினால் அது திரும்ப வரும். ஜிஎஸ்டி துறை ஒரு முறையான ஆர்டர் அனுப்பும்.

அது உங்கள் போர்ட்டலுக்கு வரும். கம்பெனியின் ஈமெயில் ஐடிக்கும் அனுப்புவார்கள். 

இதையும் படியுங்கள்:
சிகரெட்டுக்கு ஒரு GST.பீடிக்கு ஒரு GST யா?
GST

அந்த ஆர்டர் கண்டவுடன், பேங்க் எல்லாப் பணப் பரிவர்த்தனையையும் நிறுத்தும். வரி பாக்கியை அப்புறம் வசூலிக்க முடியாது என்று அதிகாரிகள் நினைக்கலாம். 

நீங்கள் தலைமறைவாகப் போகிறீர்கள் என்று சந்தேகம் வரலாம். அப்போதும் அக்கவுண்ட் முடக்கப்படும். 

ஜிஎஸ்டி நோட்டீஸ்களுக்கு நீங்கள் பதில் கொடுக்கவில்லை என்றால் கூட இந்த நடவடிக்கை தொடரும்.

முடக்கப்பட்ட அக்கவுண்ட்டை எப்படி விடுவிக்கிறது?  

அக்கவுண்ட் முடங்கினால் உடனே பயப்பட வேண்டாம். ஜிஎஸ்டி போர்ட்டலுக்குள் செல்லுங்கள். நோட்டீஸுக்குப் பதில் கொடுங்கள். 

உங்கள் நியாயத்தையும் ஆதாரங்களையும் காட்டுங்கள். அதிகாரிகள் நீங்கள் சொல்வதை ஏற்கலாம். 

அப்படி ஏற்றால், ஜிஎஸ்டி DRC-23 ஃபார்ம் கொடுத்து ரிலீஸ் செய்வார்கள். முழுமையாக ரிலீஸ் செய்ய முடியவில்லையா? 

இதையும் படியுங்கள்:
நோட்டுப் புத்தகத்திற்கு 0% GST..பேப்பருக்கு 18% GST..?புத்தகங்கள் விலை உயரப் போகிறதா..?
GST

சர்ச்சைக்குரிய தொகையில் ஒரு பகுதியைக் கட்டுங்கள். அல்லது பேங்க் கேரண்டி கொடுங்கள். இது எதுவுமே நடக்கவில்லை என்றால், நீங்கள் உயர் நீதிமன்றத்தை அணுகலாம். 

முடக்குதல் உத்தரவு வந்த ஏழு நாட்களுக்குள், ஜிஎஸ்டி DRC-22A ஃபார்மில் ஆட்சேபனைகளைச் சொல்லலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com