போலீஸ் லஞ்சம் கேட்டா உடனே ‘WhatsApp’ செய்யுங்கள்! மாவட்ட வாரியாக புகார் எண்கள் வெளியீடு..!

தமிழ்நாட்டில் லஞ்சம் கேட்கும் அல்லது வாங்கும் காவல்துறை அதிகாரிகள் மீது புகார் அளிக்க மாவட்ட மற்றும் மாநகர வாரியாக வாட்ஸ்அப் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
tamil nadu police department
tamil nadu police departmentAI Image
Updated on

தமிழ்நாட்டில் காவல்துறையில் ஊழல், முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் மற்றம் பிற ஒகுங்கீன நடவடிக்கைகள் குறத்து பொதுமக்கள் புகார் அளிக்க வாட்ஸ்அப் எண் (WhatsApp NO) அறிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையின் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கில், அனைத்து மாவட்டங்களிலும் 'உள் கண்காணிப்புப் பிரிவுகள்' (Internal Vigilance Cells) அமைக்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை அறிவித்ததுள்ளது.

டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, காவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீதான ஊழல் (லஞ்சம் கேட்கும் அல்லது வாங்கும் ), முறையற்ற நடத்தை, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பிற நெறிமுறையற்ற செயல்பாடுகள் தொடர்பான புகார்களைத் தடுக்கவும், கண்காணிக்கவும், அவை குறித்து விசாரணை நடத்தவும் இந்தப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அதன்படி தமிழ்நாட்டில் லஞ்சம் கேட்கும் அல்லது வாங்கும் அல்லது முறைகேடுகளில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் மீது புகார் அளிக்க அனைத்து மாவட்ட மற்றும் மாநகர வாரியாக 'உள் கண்காணிப்புப் பிரிவு' (Internal Vigilance Cell) சார்பில் தனித்துவமான வாட்ஸ்அப் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஊழல், முறையற்ற நடத்தை, அதிகார துஷ்பிரயோகம் அல்லது காவல்துறைப் பணியாளர்களின் பிற நெறிமுறையற்ற செயல்பாடுகள் குறித்த புகார்களை, பொதுமக்கள் தங்கள் மாவட்டம் அல்லது நகரத்திற்கான உள்-கண்காணிப்புப் பிரிவு எண்களில் தெரிவிக்கலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எண் மூலம் புகார் அளிப்பவர்களின் விவரங்கள் மற்றும் அடையாளங்கள் முழுமையாக ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்று டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

மேலும் புகார் அளித்ததற்காக எந்தவிதமான துன்புறுத்தல், அச்சுறுத்தல் அல்லது பழிவாங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கும் புகார்கள் மீது நியாயமான, பாரபட்சமற்ற, உரிய காலகெடுவிற்குள் நடவடிக்கை எடுக்கப்படுறதா என்பதை, டி.ஜி.பி., முதல் எஸ்.பி., வரையிலான காவல் துறை அதிகாரிகள் கண்காணிப்பர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் எந்த அச்சமும் இன்றி காவல்துறையினர் தொடர்பான ஊழல் அல்லது முறைகேடு புகார்களைத் தெரிவிக்கலாம் காவல்துறைத் தலைமை இயக்குநர் (DGP) கேட்டுக்கொண்டுள்ளார்.

போலீஸ் புகார்
மாவட்டம் தோறும் வாட்ஸ்அப் எண்கள்|போலீஸ் புகார்image credit-@tnpoliceoffl

சென்னை மாநகர பொதுமக்கள் 78717 23000 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலம் புகார்களைத் (போலீஸ் புகார்) தெரிவிக்கலாம் என்றும் டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாவட்டம், மாநகரம் வாரியாக புகார் அளிக்க வேண்டிய வாட்ஸ்அப் எண்கள்:

சென்னை மாநகரம்- 7871723000

தாம்பரம் மாநகரம்- 6374514428

ஆவடி மாநகரம்- 9840018110

சேலம் மாநகரம்- 9626207262

திருப்பூர் மாநகரம் - 8438761616

திருச்சி மாநகரம்- 7871202100

மதுரை மாநகரம்- 8300021100

கோவை மாநகரம்- 8148919100

நெல்லை மாநகரம்- 9952540100

காஞ்சிபுரம் - 9940031700

செங்கல்பட்டு - 9500779100

திருவள்ளூர் - 9498181359

வேலுார் - 8807258532

ராணிப்பேட்டை - 7305877732

திருப்பத்துார் - 9600903373

விழுப்புரம் - 9944889161

கள்ளக்குறிச்சி - 8870353799

கடலுார் - 9677100551

திருவண்ணாமலை - 7695878100

திருச்சி - 7448878100

இதையும் படியுங்கள்:
"லஞ்சம் கேட்கிறார்களா?" - புகார் அளிக்க தமிழக அரசின் வாட்ஸ்அப் எண் இதோ.!
tamil nadu police department

புதுக்கோட்டை - 9500550543

கரூர் - 8807709299

பெரம்பலுார் - 8903631122

அரியலுார் - 7904932100

தஞ்சாவூர் - 9840438678

திருவாரூர் - 9944336551

நாகப்பட்டினம் - 9489901106

மயிலாடுதுறை - 9087755100

கோயமுத்துார் - 7540083100

ஈரோடு - 9655220100

திருப்பூர் - 9042227100

நீலகிரி - 9789800100

சேலம் - 96293 90203

நாமக்கல் - 9566637105

தர்மபுரி - 7604904492

கிருஷ்ணகிரி - 9025552100

மதுரை - 9003719004

விருதுநகர் - 9600975100

திண்டுக்கல் - 7904300491

தேனி - 9626207262

ராமநாதபுரம் - 7904114100

சிவகங்கை - 7598788108

திருநெல்வேலி - 9498101740

இதையும் படியுங்கள்:
தவெக அரசு செக்..! உங்களிடம் போலீசார் லஞ்சம் கேட்டால் உடனே இந்த நம்பருக்கு அழையுங்கள்!
tamil nadu police department

தென்காசி - 9385678039

துாத்துக்குடி - 9489929270

கன்னியாகுமரி - 7358776100

logo
Kalki Online
kalkionline.com