கனடாவில் காட்டுத்தீ… 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

canada wildfires
canada wildfires
Published on

கனடாவில் மூன்று மாகாணங்களில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில், அங்கிருந்த 25 ஆயிரம் மக்களை வெளியேற்றியுள்ளனர்.

கனடாவின் மனித்தோபா, ஆல்பர்ட்டா மற்றும் சஸ்காட்செவன் ஆகிய மூன்று மத்திய மேற்கு மாகாணங்களில் தீவிர காட்டுத்தீ பரவி வருவதால், 25,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். வறண்ட காலநிலை, அதிக வெப்பம் மற்றும் பலத்த காற்று காரணமாக தீ வேகமாகப் பரவி வருவதால், அவசரகால நிலை அறிவிக்கப்பட்டு, மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

மனித்தோபா மாகாணத்தில்தான் அதிகளவிலானோர், சுமார் 17,000 பேர், வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த வாரம் அவசரகால நிலையை மனித்தோபா அறிவித்தது. சஸ்காட்செவனில் சுமார் 8,000 பேரும், ஆல்பர்ட்டாவில் 1,300 பேரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என சஸ்காட்செவன் மாகாணத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஃபிளின் ஃபிளான், கிரான்பெரி போர்ட்டேஜ் போன்ற நகரங்களில் தீயின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. ஃபிளின் ஃபிளானில் 5,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கிரான்பெரி போர்ட்டேஜ் பகுதியில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. இந்த தீ ஒரு வாரத்திற்கு முன்பு சஸ்காட்செவன் மாகாணத்தின் கிரைட்டன் அருகே தொடங்கி, பின்னர் மனித்தோபா எல்லைக்குள் வேகமாக பரவியுள்ளது.

இதையும் படியுங்கள்:
சுவையான கேரளா ஸ்பெஷல் சப்பாத்தி ரோல் மற்றும் பீட்ரூட் பச்சடி!
canada wildfires

மீட்புப் பணிகள் மற்றும் சவால்கள்:

தீயணைப்பு வீரர்கள், ராணுவத்தினர் மற்றும் தன்னார்வலர்கள் தீயை அணைக்க அயராது உழைத்து வருகின்றனர். மற்ற மாகாணங்களிலிருந்தும், அமெரிக்காவின் அலாஸ்கா, ஓரிகன், அரிசோனா போன்ற மாநிலங்களிலிருந்தும் தீயணைப்புப் படையினர் மற்றும் விமானங்கள் உதவிக்கு அனுப்பப்பட்டுள்ளன. இருப்பினும், பலத்த புகை மூட்டம் மற்றும் சில இடங்களில் ட்ரோன்களின் அத்துமீறல் காரணமாக நீர் தெளிக்கும் விமானங்கள் செயல்படுவதில் இடையூறுகள் ஏற்படுகின்றன.

காட்டுத்தீயினால் ஏற்படும் புகை காரணமாக கனடா மற்றும் அமெரிக்காவின் எல்லைப் பகுதிகளில் காற்றின் தரம் வெகுவாகக் குறைந்துள்ளது. இது பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது. சஸ்காட்செவன் பொது பாதுகாப்பு நிறுவனம், காற்றின் தரம் மற்றும் பார்வைத் திறன் ஒவ்வொரு மணி நேரமும் மாறுபடக்கூடும் என்றும், புகை அளவு அதிகரிக்கும்போது உடல்நல அபாயங்கள் அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

சஸ்காட்செவன் முதல்வர் ஸ்காட் மோ, அடுத்த 4 முதல் 7 நாட்கள் மிகவும் முக்கியமானவை என்றும், வானிலை மாற்றம் ஏற்பட்டு மழை பெய்தால் மட்டுமே நிலைமை கட்டுக்குள் வரும் என்றும் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com