நீங்க அறிவாளியா மாறணுமா... லேப்டாப்பை மூடிட்டு ஒரு பேனாவை கையில எடுங்க போதும்!

டிஜிட்டல் யுகத்தில் தட்டச்சு செய்வதை விட, கைகளால் எழுதுவது மூளையின் செயல்பாட்டையும் நினைவாற்றலையும் எப்படி பல மடங்கு அதிகரிக்கிறது என்பதற்கான ஆச்சரியமூட்டும் அறிவியல் உண்மைகள்.
Typing vs writing facts
Typing vs writing facts
Updated on

Typing vs writing facts: இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலர் பேனா பிடித்து எழுதுவதை கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டோம். மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டர் கீபோர்டுகளில் வேகமாக தட்டச்சு செய்வது தான் இப்போது ட்ரெண்டாக உள்ளது. AI தொழில்நுட்பம் நமது பல கடினமான வேலைகளை மிகவும் எளிதாக்கி வரும் இந்த காலகட்டத்தில், மனிதர்களுக்கே உரிய சொந்தமாக சிந்திக்கும் திறன் மற்றும் திட்டமிடும் ஆற்றல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. 

இதனால்தான் கையால் எழுதும் பழைய பழக்கத்தை மீண்டும் நாம் கையில் எடுக்க வேண்டும் என பிரபல நிபுணர்கள் ஆணித்தரமாக கூறுகிறார்கள். இது குறித்து நரம்பியல் நிபுணர்கள் சொல்லும் அதிர்ச்சியான உண்மைகளை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

மூளையின் செயல்பாடுகளில் ஏற்படும் மாபெரும் மாற்றம்!

தட்டச்சு செய்வதை விட கைகளால் எழுதுவது நமது மூளையை அதிக அளவில் சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது. சமீபத்தில் மரானோ (Marano) மற்றும் அவரது மருத்துவ குழுவினர் நடத்திய ஆய்வில் ஒரு அற்புதமான உண்மை வெளிவந்துள்ளது. நாம் கீபோர்டில் டைப் செய்யும் போது மூளையில் 10 பகுதிகள் மட்டுமே வேலை செய்கின்றன. ஆனால் கைகளால் எழுதும் போது 13 முக்கிய பகுதிகள் தூண்டப்படுகின்றன. 

முன்னணி ஆராய்ச்சியாளர்கள், கையால் எழுதுவது மூளையின் நரம்பியல் இணைப்புகளை வலுப்படுத்தி புதிய விஷயங்களை ஆழமாக கற்பதற்கான ஒரு சூப்பரான சூழ்நிலையை உருவாக்குகிறது என தங்களது ஆய்வில் ஆணித்தரமாக நிரூபித்துள்ளனர்.

நினைவாற்றல் திறன் அபரிமித வளர்ச்சி!

கைகளால் எழுதுவது மனிதர்களின் நினைவாற்றலை பல மடங்கு அதிரடியாக அதிகரிக்கிறது. வேகமாக டைப் செய்யும் போது நாம் எதையும் ஆழமாக சிந்திப்பதில்லை. ஆனால் கையால் எழுதும் வேகம் குறைவு என்பதால், நமது மூளை தகவல்களை சுருக்கி தனக்கு புரிந்த எளிய மொழியில் மாற்றி சிந்திக்க தொடங்கும். 

இது மூளையின் செயல்திறனை பெருமளவு கூட்டுகிறது. இதுகுறித்து மேலும் நடத்திய ஆய்வுகளின்படி, ஒரு விஷயத்தை வெறும் எழுத்துக்களாக படிக்காமல், அதை வரைந்து அல்லது சிறு குறிப்புகளாக எழுதி படிக்கும் போது அது நீண்ட காலம் நமது நினைவில் பசுமையாக பதிந்திருக்கும் என்பது நூறு சதவீதம் உறுதியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்:
இரைச்சலில்லா உலகம் கேட்போம்!
Typing vs writing facts

பேனாவின் முக்கியத்துவம்!

உங்களின் அன்றாட வேலைகளை லேப்டாப்பில் குறிப்பதற்கு பதிலாக ஒரு சிறிய நோட்டில் எழுதிப் பழகுங்கள். உங்களின் மனதில் தோன்றும் எண்ணங்களை கைகளால் டைரியாக எழுதும் பழக்கம் மன அழுத்தத்தை குறைத்து ஒரு மாபெரும் நிம்மதியை தரும். 

இன்றைய நவீன உலகில் பேப்பர் மற்றும் நோட்டுப் புத்தகங்களின் வியாபாரம் உலக அளவில் பல ஆயிரம் கோடிகளை தாண்டி அசுர வளர்ச்சியடைந்து வருவது மக்கள் மீண்டும் பழைய முறைக்கு திரும்புவதையே தெளிவாக காட்டுகிறது. இலக்குகளை கைகளால் எழுதும் போது அதன் மீதான நமது ஈடுபாடு பன்மடங்கு அதிரடியாக அதிகரிக்கிறது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: கல்லாய் போன மனிதர்கள்!
Typing vs writing facts

தொழில்நுட்பம் எவ்வளவு அபரிமிதமாக வளர்ந்தாலும் நமது மூளையை முழுமையாக பயன்படுத்த பேனா மற்றும் காகிதத்தால் மட்டுமே முடியும். கம்ப்யூட்டர் நமது வேலைகளை எளிதாக்கினாலும், ஆழமான சிந்தனைக்கும் சிறப்பான நினைவாற்றலுக்கும் கைகளால் எழுதும் அந்த பழைய முறையை நாம் மீண்டும் நமது வாழ்க்கையில் கட்டாயம் கொண்டு வர வேண்டும். இதுவே நமது அறிவுக்கூர்மைக்கு நாம் செய்யும் மிகப்பெரிய நன்மையாகும்.

logo
Kalki Online
kalkionline.com