முக்கோண வடிவத்தில் பூமி இருந்தால்?

Triangle Earth
If the earth exists in the form of a Triangle?
Published on

பூமி என்பது உருண்டை வடிவில் ஆனது என்பது நாம் நன்கு அறிந்த விஷயம். ஆனால், ஒருவேளை பூமி முக்கோண வடிவத்தில் இருந்தால் என்ன ஆகும்? என்பதை கற்பனை செய்து பாருங்கள். இவ்வாறு நடப்பதற்கு வாய்ப்பில்லை என்றாலும், இதுபோன்ற கேள்விகள் நம்மை பல விஷயங்களை சிந்திக்கத் தூண்டுகிறது. பூமியின் வடிவம் நம் வாழ்வில் எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை இந்த கற்பனை கேள்வி மூலம் நாம் புரிந்து கொள்ளலாம். 

பூமியின் கோள வடிவம் அதன் ஈர்ப்பு விசை சீராக பரவக் காரணமாக இருக்கிறது. அனைத்து பொருட்களும் பூமியின் மையத்தை நோக்கி ஈர்க்கப்படுகின்றன. ஆனால், பூமி முக்கோண வடிவத்தில் இருந்தால் ஈர்ப்புவிசை சீராக இருக்காது. முக்கோண வடிவத்தின் மூன்று கோணங்களிலும் ஈர்ப்பு விசை அதிகமாகவும், மூன்று பக்கங்களின் நடுவில் குறைவாகவும் இருக்கும். இதனால், பொருட்கள் ஒரு குறிப்பிட்ட திசையில் மட்டுமே இழுக்கப்படும். 

பூமியின் உருண்டை வடிவம், பூமியில் சூரிய ஒளி சீராகப் பரவ அனுமதிக்கிறது. ஆனால், முக்கோண வடிவத்தில் பூமி இருந்தால், சூரிய ஒளி மூன்று கோணங்களில் மிக அதிகமாகவும், அதன் பக்கங்களில் மிகக் குறைவாகவுமே படும். இதனால், பூமியின் வெப்பநிலை மிகப்பெரிய மாற்றங்களைச் சந்திக்கும். மூன்று கோணங்கள் மிகவும் வெப்பமாகவும், அதன் பக்கங்கள் குளிராகவும் இருக்கலாம். இது காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தி உலகின் பல பகுதிகள் உயிர்கள் வாழ்வதற்கு சாத்தியமற்றதாக மாறிவிடும். 

கடல்கள் மற்றும் பெருங்கடல் நீர்மட்டம் சீராக இருப்பதற்கு பூமியின் உருண்டை வடிவம் முக்கிய காரணமாக உள்ளது. ஆனால், முக்கோண வடிவத்தில் நீர் மூன்று கோணங்களில் அதிகமாக குவிந்துவிடும். இதனால், பெரும்பாலான கடல்கள் காணாமல் போகும். சில பகுதிகளில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல நிலப் பகுதிகள் மூழ்கிப் போகும். 

இதையும் படியுங்கள்:
ஒரு 5 Seconds பூமி சுற்றவில்லை என்றால் என்ன ஆகும்?
Triangle Earth

பூமியில் உயிர்கள் வாழ்வதற்குத் தேவையான சூழலை அதன் கோள வடிவம் உருவாக்குகிறது. ஆனால், முக்கோண வடிவத்தில் பூமி இருந்தால் உயிரினங்கள் வாழத் தேவையான நீர், உணவு, ஆக்ஸிஜன் ஆகியவை சீராகக் கிடைக்காது. இதனால், பல உயிர்கள் அழிந்துபோகும். இதில், மனிதர்கள் உட்பட சில உயிரினங்களால் மட்டுமே செழித்து வாழ முடியும். மேலும், பயணம் மற்றும் தொடர்புக்கு முக்கோண வடிவம் மிகப்பெரிய தடையாக இருக்கும். மூன்று கோணங்களில் மிகவும் செங்குத்தான மலைகள் இருக்கும் என்பதால், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது மிகவும் கடினமாக இருக்கலாம். 

பூமி முக்கோண வடிவத்தில் இருந்தால் நாம் வாழும் உலகம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். ஈர்ப்பு விசை, காலநிலை, கடல்கள், உயிரினங்கள், பயணம் மற்றும் தொடர்பு ஆகிய அனைத்தும் பெரும் மாற்றங்களைச் சந்திக்கும். இது நமக்கு ஒரு பாடத்தை கற்றுத் தருகிறது. பூமியின் உருண்டை வடிவம் நம் வாழ்வில் எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. எனவே, நாம் வாழும் இந்த அழகான பூமியை பாதுகாப்பது நம் அனைவரின் கடமை. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com