ஏன் விமான நிலையங்களில் நீல நிற அஞ்சல் பெட்டிகள் உள்ளன? அதன் சுவாரசியப் பின்னணி இதோ!


Indian Department of Posts
Indian Department of Posts
Published on

கவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இன்றைய காலத்திலும், இந்திய அஞ்சல் துறை (India Post) தனது பாரம்பரியத்தையும் சேவையையும் நவீனம் கலந்து வழங்கி வருகிறது. அஞ்சல் நிலையங்களில் நாம் காணும் சிவப்பு நிறப் பெட்டிகளுக்கு மத்தியில், சில இடங்களில் காணப்படும் ‘நீல நிற அஞ்சல் பெட்டிகள்’ (Blue Post Boxes) தனித்துவமானவை. இந்த நீல நிறப் பெட்டிகளின் பின்னணியையும் அதன் பயனையும் இங்கு காண்போம்.

சாதாரண உள்நாட்டு அஞ்சல்களுக்கு நாம் எப்போதும்போல சிவப்பு நிறப் பெட்டிகளையே பயன்படுத்த வேண்டும். நீங்கள் ஒரு குறிப்பிட்ட நகரத்தில் இந்த பெட்டியைத் தேடுகிறீர்கள் என்றால், அந்த ஊரின் தலைமை அஞ்சல் நிலையத்திற்கு (GPO/Head Post Office) சென்றால் இதைக் காணலாம். இந்திய அஞ்சல் துறையின் விதிகளின்படி, இந்த நீல நிறப் பெட்டிகள் மெட்ரோ நகரங்களுக்கு இடையேயான அஞ்சல்களை (Metro-to-Metro Mail) விரைவாகக் கையாள்வதற்காக வடிவமைக்கப் பட்டுள்ளன.

விமான நிலையங்களில் இவை இருப்பதற்கான காரணங்கள்:

வேகமான பரிமாற்றம்: விமான நிலையங்களில் சேகரிக்கப்படும் கடிதங்கள் நேரடியாக அடுத்த மெட்ரோ நகரங்களுக்குச் செல்லும் விமானங்களில் ஏற்றப் படுவதால், விநியோக நேரம் குறைகிறது. முக்கியப் பகுதிகளாகிய  சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற பெருநகரங்களின் விமான நிலைய முனையங்களில் (Terminals) பயணிகள் மற்றும் ஊழியர்களின் வசதிக்காக இவை வைக்கப்பட்டிருக்கும்.

இந்தியாவில் நீல நிற அஞ்சல் பெட்டிகளின் வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது.

1990-களின் முற்பகுதியில், இந்திய அஞ்சல்துறை தனது சேவையை நவீனப்படுத்தவும், கடிதங்களை விரைவாகப் பிரிக்கவும்‘சேனல்’ முறையை அறிமுகப்படுத்தியது. அதன் ஒரு பகுதியாகவே இந்த நீல நிறப் பெட்டிகள் உருவாயின.

இதையும் படியுங்கள்:
பெட்ரோல், டீசல் எல்லாம் ஓரம்போ... உலகையே அதிர வைத்த புதிய லேசர் டெக்னாலஜி!

Indian Department of Posts

இதன் முக்கிய வரலாற்று மைல்கற்கள்.

மெட்ரோ சேனல் (Metro Channel) அறிமுகம்: 1994-95 காலகட்டத்தில், இந்திய அஞ்சல்துறை ஆறு முக்கிய மெட்ரோ நகரங்களுக்கு இடையேயான கடிதப் போக்குவரத்தை வேகப்படுத்த ‘மெட்ரோ சேனல்’ என்ற திட்டத்தைக் கொண்டு வந்தது. இந்தத் திட்டத்திற்காகவே பிரத்யேகமாக நீல நிற அஞ்சல் பெட்டிகள் அறிமுகப்படுத்தப் பட்டன.

வண்ணக் குறியீடுகளின் நோக்கம்: முன்பு அனைத்து கடிதங்களும் ஒரே சிவப்பு நிறப் பெட்டியில் போடப்பட்டன. இதனால் அவற்றை ஊர் வாரியாகப் பிரிப்பதற்கு அதிக நேரம் எடுத்தது. இந்த நேரத்தைக் குறைக்க வண்ணக் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டன.  நீல நிறம் மெட்ரோ நகரங்களுக்கு மட்டும்,  பச்சை நிறம்  அதே நகரத்திற்குள் அனுப்பப்படும் கடிதங்களுக்கு, சிவப்பு நிறம்.

விமானப் போக்குவரத்து இணைப்பு:  வரலாற்று ரீதியாக, இந்த நீல நிறப் பெட்டிகளில் சேகரிக்கப்படும் கடிதங்கள் மற்ற அஞ்சல்களுடன் கலக்காமல், நேரடியாக விமான நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அடுத்த மெட்ரோ நகரத்திற்குச் செல்லும் முதல் விமானத்திலேயே ஏற்றப்பட்டன. இதனால் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் கடிதங்கள் சென்றடைய வழிவகை செய்யப்பட்டது.  தற்போது அரசாங்க ஆவணங்கள் மற்றும் முக்கியமான வணிகக் கடிதங்களை விரைவாக அனுப்ப இன்றும் இந்த நீல நிறப் பெட்டிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
கம்ப்யூட்டர் வேலை இனிமேல் காலி! எந்தெந்த துறைகள் தற்போதைக்கு தப்பிப்பது உறுதி!

Indian Department of Posts

இந்திய அஞ்சல் துறையின் ‘மெட்ரோ சேனல்’ திட்டத்தின் அடையாளமாக விளங்கும் இந்த நீல நிற அஞ்சல் பெட்டிகள், கடிதங்களைப் பிரிக்கும் நேரத்தைக் குறைப்பதிலும், விரைவான விநியோகத்தை உறுதி செய்வதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அஞ்சல் துறையின் இந்த வண்ணக் குறியீட்டு முறை, காலத்திற்கேற்ப சேவையை மேம்படுத்தும் ஒரு சிறந்த வரலாற்று மைல் கல்லாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com