ரோபோட் தெரியும்; கோபோட் தெரியுமா?

Cobot
Cobot
S CHANDRA MOULI

எஸ். சந்திர மௌலி (S Chandra Mouli) எஸ். சந்திர மௌலி கடந்த நாற்பதாண்டுகளாக கல்கி குழும பத்திரிகைகளில் எழுதிவரும் மூத்த பத்திரிகையாளர். கல்கி வெளியிட்ட பல்வேறு சிறப்பிதழ்கள், மற்றும் தீபாவளி மலர்கள், தொழில் மலர்கள், விடுமுறை மலர்களுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்தவர். 2008ல் கல்கி வெளியிட்ட “குஜராத் டுடே” சிறப்பிதகளுக்காக ஒரு வார காலம் குஜராத் முழுவதும் பயணித்து, குஜராத்தின் வளர்ச்சியை நேரில் கண்டு, எழுதியவர். சமூக அக்கறையோடு கல்கி மேற்கொண்ட “மாதம் ஒரு மாவட்டம்” திட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணித்து பங்களித்தவர். வாஜ்பாய், வி.பி.சிங் தொடங்கி மன்மோகன் சிங், நரேந்திர மோடி வரை ஏழு இந்தியப் பிரதமர்களை சந்தித்து பேட்டி கண்டவர். எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, என்.டி.ஆர், ஜோதி பாசு, வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், சிவாஜி கணேசன், ரஜினி காந்த், கமலாசன், ஜெமினிகணேசன், சூர்யா, மணிரத்னம், கிரிக்கெட்டர் ஸ்ரீக்காந்த், விக்கு வினாயகராம். உமையாள்புரம் சிவராமன், வயலின் கன்யாகுமரி, ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் மு.மேத்தா, நா. முத்துகுமார், சோ ராமசாமி என பல்துறைப் பிரபலங்களையும் பேட்டி கண்டு எழுதியவர். இயக்குனர் ஸ்ரீதர், நடிகர் நாகேஷ், ஓவியர் கோபுலு, இயக்குனர் எஸ்பி. முத்துராமன், திருமதி ஒய்,ஜி.பி. ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், நடிகர் ஏ.ஆர்.எஸ். மெஜிக் நிபுணர் லால் உள்ளிட்ட பலரது வாழ்க்கை அனுபவங்களை இவர் தொடராக எழுதி, அவை பின்னர் புத்தகங்களாக வெளியாகி உள்ளன. இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானபோது, இளைய தலைமுறையினருக்கு அமரர் கல்கி பன்முகச் சாதனை வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் “கல்கி-பொன்னியின் செல்வர்” என்ற தலைப்பில் அவரது வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியவர். பெண்சிசுக் கொலை தொடர்பான கட்டுரைக்கு “லாட்லி விருதும்”, ரோட்டரி சங்கத்தின் “சாதனை விருதும்” பெற்றவர். தற்போது madraspaper இணைய வார இதழில் “ஓரு குடும்பக் கதை: என்ற தலைப்பில் இந்திய அரசியலில் நேரு குடும்பத்தின் பங்களிப்பு குறித்த நெடுந்தொடர் ஒன்றை எழுதி வருகிறார். சோ குறித்த ஒரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்.

Updated on

னிதர்கள் செய்யும் வேலைகளை எளிதாகச் செய்து முடிக்கும் ரோபோட்கள் பற்றி நமக்கெல்லாம் தெரியும். ஆனால், கோபோட் என்றால் என்ன தெரியுமா? ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் மும்பையில் நடக்கவிருக்கும் ஆட்டோமேஷன் எக்ஸ்போ 2024 கண்காட்சிக்குப் போனால் தெரிந்துகொள்ளலாம்.

ஆம்! ஐ.ஈ.டி. கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் ஆட்டோமேஷன் கண்காட்சிகளை நடத்தி வருகிறது. இந்த வருடத்தின் ஆட்டோமேஷன் எக்ஸ்போ கண்காட்சி மும்பையில் உள்ள மும்பை கண்காட்சி மையத்தில் அரங்கு எண் 1 & 2ல் வரும் ஆகஸ்ட் 21 முதல் 24 வரை நடைபெற உள்ளது. அதில் 30,000 சதுர மீட்டர் பரப்பளவில் 500க்கும் அதிகமான அரங்குகள் இடம் பெறுகின்றன. ஆயிரத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன. இந்தக் கண்காட்சியை லார்சன்&டூப்ரோ லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் (எரிசக்தி) மற்றும் உறுப்பினர் சுப்ரமணியன் சர்மா துவக்கி வைக்கிறார். மும்பையின் தொழில்துறை முன்னோடிகள் பலரும் இதில் முக்கிய விருந்தினர்களாகக் கலந்து கொள்கிறார்கள்.

ஆட்டோமேஷன் எக்ஸ்போ கண்காட்சி
ஆட்டோமேஷன் எக்ஸ்போ கண்காட்சி

பாரம்பரிய ரோபோக்கள் செயல்திறன், எளிமையான இயக்கம் மற்றும் செலவுச் சிக்கனம் போன்ற பல காரணங்களுக்காக தொழில்துறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், அண்மைக் காலமாக கோபோட்களின் வருகை உற்பத்தித் துறையில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோபோட் என்றால் நமக்கெல்லாம் தெரியும். அதென்ன கோபோட்? கோபோட் என்பது கூட்டு ரோபோ என்பதன் சுருக்கம். இவற்றை துணை ரோபோ என்றும் சொல்வார்கள்.

வழக்கமான ரோபோக்கள் போலல்லாமல், கோபோட்கள் அதிக செயல் திறன் கொண்டவை; கனமான பணிகளுக்கு ஏற்றவை. மேலும், அவை தொழிலாளர்களுடன் இணைந்து செயல்படக் கூடியவை, பாதுகாப்பானவை.

ஆட்டோமேஷன் எக்ஸ்போ கண்காட்சி
ஆட்டோமேஷன் எக்ஸ்போ கண்காட்சி

மும்பையில் நடைபெறும் ஆட்டோமேஷன் எக்ஸ்போவில் செயற்கை நுண்ணறிவு மற்றும் கோபோட்ஸ் ஆகியவை அனைத்துத் தரப்பினரது கவனத்தையும் ஈர்க்கும்.

இதையும் படியுங்கள்:
AI உங்கள் உணர்வுகளை புரிந்து கொண்டால்? அச்சச்சோ! 
Cobot

இந்தக் கண்கட்சியினை நடத்தும் ஐ.ஈ.டி. கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவரான டாக்டர் எம்.ஆரோக்கியசாமி ஆட்டோமேஷன் எக்ஸ்போ 2024 பற்றிக் கூறுகையில், "நாம் ஐந்தாவது தொழில்துறை புரட்சியின் உச்சத்தில் இருக்கிறோம். அங்கு டிஜிட்டல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, ப்ராசஸ் ஆட்டோமேஷன் மற்றும் ஃபேக்டரி ஆட்டோமேஷன் ஆகியவை மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. அவற்றில் ரோபோடிக்ஸ், குறிப்பாக கோபோட்ஸ் முக்கியப் பங்கு வகிக்கின்றன” என்று குறிப்பிட்டார்.

“இந்த எக்ஸ்போவின் தொடக்க விழாவினைத் தொடர்ந்து, முன்னணி தொழில்துறையினரின் முக்கிய உரை, நிபுணர்களுடன் சொற்பொழிவுகள், சி.ஈ.ஓ. நெட்வொர்க்கிங் இரவு, செயல்முறை ஆட்டோமேஷன், ரோபோடிக்ஸ் மற்றும் தொழிற்சாலை ஆட்டோமேஷன் பற்றிய மாநாடுகள், விருது விழா மற்றும் பல பணிப் பட்டறைகள், குழு விவாதங்கள் என ஏராளமான நிகழ்வுகள் நடைபெறும்” என்று கூறுகிறார் கண்காட்சியின் இயக்குனர் ஜோதி ஜோசப். இது குறித்த மேலும் தகவல்களுக்கு, www.automationindiaexpo.comஐ பார்வையிடலாம்.

logo
Kalki Online
kalkionline.com