தற்போதைய டிஜிட்டல் உலகில் க்யூ ஆர் கோடுகள் தான் உலகையே ஆட்சி செய்கின்றன. ஹோட்டல்களில் பில் செலுத்துவது முதல் ஜி.பே மூலம் பணம் அனுப்புவது வரை கடைகளில் வாங்கும் பொருட்களை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள உதவுவது வரை இந்த கருப்பு ,வெள்ளை சதுரங்கள் மக்களின் வாழ்க்கையை மிகவும் எளிதாக மாற்றியுள்ளது.
இது பார்ப்பதற்கு எளிமையாக தோன்றினாலும் அவர்களின் கண்டுபிடிப்புக்கு பின்னால் உள்ள கதை மிகவும் சுவாராஸ்யமானது.
QR வீட்டை கண்டுபிடித்தவர் ஜப்பானிய பொறியாளரான மசா ஹிரோ ஹரா ஆவார். இவரது கண்டுபிடிப்பு வணிகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை மட்டும் அல்ல உலகம் முழுவதும் மக்கள் தொழில்நுட்பத்துடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதையும் முற்றிலும் மாற்றியுள்ளது.
டென்சோ வேவ் நிறுவனத்தில் இவர் ஒரு பொறியாளர். 1994 ஜப்பானிய நிறுவனமான டென்சோ வேவ் நிறுவனத்தில் இவர் ஆட்டோமொபைல் பாகங்களை லேபிளிங் செய்வதற்காக இதை கண்டுபிடித்தார்.
பார்கோடு:
பார்கோடு என்பது லேபிளிடப்பட்ட உருப்படிக்கு குறிப்பிட்ட தகவல்களைக் கொண்ட இயந்திரத்தால் படிக்கக்கூடிய ஒளியியல் பாடமாகும்.
அதே நேரத்தில் க்யூ ஆர் குறியீடு ஒரு இருப்பிடம் அடையாளம் காட்டி மற்றும் வலை கண்காணிப்புக்கான தரவை கொண்டுள்ளது. தரவை திறமையாக சேமிக்க QR குறியீடுகள் நான்கு தரப்படுத்தப்பட்ட குறியாக்க முறைகளை பயன்படுத்துகின்றன.
QR குறியீடு உருவாக்கப்பட்டது எப்படி?
பாரம்பரிய பார் கோடுகள் அனுமதிக்கும் தகவல்களை விட அதிகமான தகவல்களை சேமித்து ஸ்கேன் செய்வதற்கு ஒரு சிறந்த வழி வேண்டும் என்பதை மசா ஹிரோ ஹரா உணர்ந்தார்.
பார்கோடுகள் வரையறுக்கப்பட்ட தரவை மட்டுமே வைத்திருக்க முடியும். மேலும் ஒரு குறிப்பிட்ட திசையில் மட்டுமே பார்கோடுகளை ஸ்கேன் செய்ய வேண்டி இருந்தது.
எனவே பரா புதிதாக ஒன்றை உருவாக்கத் தொடங்கினார்.
சதுர கட்டத்திற்குள் இருக்கும் கருப்பு மற்றும் வெள்ளை துண்டுகளை பயன்படுத்தும் 'கோ' என்ற கிளாசிக் ஜப்பானிய போர்டு விளையாட்டில் இருந்து அவர் உத்வேகம் பெற்றார். இது எந்த கோணத்தில் இருந்தும் ஸ்கேன் செய்யக்கூடிய இரு பரிமாண குறியீட்டிற்கான அந்த யோசனையை அவருக்கு வழங்கியது.
தனது குழுவுடன் பல மாதங்கள் கடின உழைப்புக்கு பிறகு 1994-ல் QR குறியீட்டை உருவாக்கினார்.
பழைய பார் கோடுகளைப் போல் அல்லாமல் QR குறியீடுகள் அதிக தகவல்களை வைத்திருக்க முடியும். மேலும் எழுத்துக்கள் மற்றும் எண்கள் கூட வைத்திருக்க முடியும். எந்த திசையில் இருந்தும் உடனடியாக ஸ்கேன் செய்ய முடியும்.
இது தொழில்நுட்பத்தில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
ஆரம்பத்தில் QR குறியீடுகள் தொழிற்சாலைகளில் கார் பாகங்களை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டன. ஆனால் விரைவில் ஷாப்பிங், மருத்துவமனைகள், போக்குவரத்து, திரைப்படங்கள் பலவற்றில் மக்கள் பல வழிகளை கண்டுபிடித்தனர்.
QR குறியீடு உலகெங்கும்
டெவலப்பர்கள், வணிகங்கள் இலவசமாகப் பயன்படுத்தத் தொடங்கின. இது உலகம் முழுவதும் பயன்படுத்தும் ஒரு தொழில்நுட்பமாக மாறினாலும் ஹராவும், அவரது குழுவினரும் ஒரு போதும் பணம் சம்பாதிக்கவில்லை. ஏனெனில் அது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று அவர்கள் மிகவும் விரும்பினர்.
இதுவே QR கோடு வந்த வரலாறு ஆகும்.