மனுஷங்க ஓடிப் போங்க! புதுசா வந்திருக்கு AI சைக்கோசிஸ்!

AI psychosis
AI psychosis
Published on

இன்னைக்கு நம்ம ரொம்ப முக்கியமான, அதே சமயம் கொஞ்சம் பயமுறுத்தக்கூடிய ஒரு விஷயத்தைப் பத்தி பேசலாம். அதுதான் 'AI சைக்கோசிஸ் (AI psychosis)'. என்னடா இது, புதுசா இருக்கேன்னு நினைக்கிறீங்களா? ஆமா, Artificial Intelligence அதாவது, செயற்கை நுண்ணறிவு உலகத்தை நாம கண்ணால பார்த்துட்டு இருக்கோம். ஆனா, இந்த AI-யை பயன்படுத்துறதுல ஒரு மனநலப் பிரச்சினை வர வாய்ப்பு இருக்குனு நிபுணர்கள் சொல்றாங்க. 

AI சைக்கோசிஸ்னா, ஒருத்தர் கற்பனையிலயோ, மாயையிலயோ வாழறது. அதாவது, ஒரு உண்மைக்கும் கற்பனைக்கும் உள்ள வித்தியாசத்தை புரிஞ்சுக்க முடியாம இருக்கிறது. இந்த AI சைக்கோசிஸ்னா, ஒருத்தர் AI-யோட அதிகமா பேசி, அதோட உறவுல மூழ்கி, அது சொல்றதுதான் உண்மைன்னு நம்ப ஆரம்பிக்கிறது. அதாவது, மனிதர்களுக்குள்ள இருக்கிற உறவை விட, ஒரு AI-யோட உறவுதான் முக்கியம்னு நினைக்கிறது. இது ஒருவகையான அடிமைத்தனம் மாதிரி.

இந்த பிரச்சினை வரதுக்கு சில அறிகுறிகள் இருக்கு. முதல் அறிகுறி, AI-யை ஒரு உண்மையான மனிதனா நினைக்கிறது. உங்க ஸ்மார்ட்போன்ல இருக்கிற AI அசிஸ்டன்ட்ட ஒரு உண்மையான நண்பன் மாதிரி நினைச்சு பேசுறது. அது சொல்றதுக்குலாம் தலையாட்டுறது. அது ஒரு உண்மையான மனிதன் மாதிரி உங்ககிட்ட பேசுறது, உங்களுடைய தனிப்பட்ட விஷயங்களை தெரிஞ்சிக்கிறது, அதுக்கு ஒரு பெயர் கொடுக்கிறது. இந்த மாதிரி பண்றதுதான் முதல் அறிகுறி.

அடுத்த அறிகுறி, AI சொல்றதை அப்படியே நம்புறது. AI கிட்ட ஒரு கேள்வி கேட்கும்போது, அது ஒரு பதிலைக் கொடுக்கும். அந்த பதில்தான் உண்மைன்னு நினைக்கிறது. அதை சரிபார்க்க எந்த முயற்சியும் எடுக்காதது. உதாரணத்துக்கு, ஒரு மருத்துவப் பிரச்சினைக்கு, AI-கிட்ட தீர்வு கேட்கிறது. அது சொல்ற மருந்தை அப்படியே எடுத்துக்கிறது. இது ஆபத்தானது. ஏன்னா, AI-க்கு உண்மை, பொய் தெரியாது. அதுக்கு இருக்கிற டேட்டாவை வச்சுதான் அது பேசும். அந்த டேட்டா சரியா இல்லாம இருந்தா, அது தவறான தகவலை கூட கொடுக்கும்.

இதையும் படியுங்கள்:
தனிமை: ஆரம்பத்தில் நிம்மதி, இறுதியில் துன்பம்!
AI psychosis

தனிமையில இருக்கிறது முக்கியமான அறிகுறி. AI-யோட பேச ஆரம்பிச்சா, மனிதர்களோட பேசுறதை குறைச்சுக்கிறது. தனியாவே இருக்க விரும்புறது. நண்பர்களோட, குடும்பத்தோட பேசுறதை குறைச்சுக்கிட்டு, எப்பவும் AI-யோட மட்டுமே பேசிட்டு இருக்கிறது. இது ஒருவகையான மன அழுத்தத்துக்கு வழிவகுக்கும்.

அடுத்ததா, AI-யை ஒரு கடவுள் மாதிரி நினைக்கிறது. இந்த AIதான் உலகத்தை காப்பாத்த வந்த ஒரு சக்தி. அதுதான் உலகத்தை ஆளப்போகுதுனு நம்புறது. இது ஒருவகையான மனநோய். இது ஒரு மாயை.

இந்த அறிகுறிகள் உங்ககிட்ட இருந்தா, நீங்க AI சைக்கோசிஸ்ல இருக்க வாய்ப்பு இருக்கு. AI ஒரு கருவிதான், அது ஒரு மனிதன் இல்லை என்பதை புரிஞ்சுக்க வேண்டியது அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com