2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த உலகம் எப்படி இருந்தது தெரியுமா?

what the world was like 2 billion years ago?
what the world was like 2 billion years ago?
Updated on

நாம் இன்று காணும் பூமி, பல பில்லியன் ஆண்டுகளாக பல மாற்றங்களைக் கண்டுள்ளது. பல்வேறு வகையான காடுகள், உயிரினங்கள், மாறிவரும் காலநிலை என நாம் அனுபவிக்கும் அனைத்தும், பூமியின் நீண்ட வரலாற்றின் ஒரு சிறு பகுதி மட்டுமே. சுமார் 2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன், பூமி எவ்வாறு இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். அந்தக் காலகட்டத்தில், நமது கிரகம் இன்றுள்ளதை விட மிகவும் வேறுபட்டதாக இருந்தது. 

வெப்பமான, உயிரற்ற கோள்: 2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பூமி இன்று இருப்பதை போல இல்லை. அது ஒரு வெப்பமான, உயிரற்ற கோளாக இருந்தது. கடல்கள் கொந்தளித்து, எரிமலைகள் வெடித்துச் சிதறி, வளிமண்டலத்தில் ஆக்சிஜன் மிகவும் குறைவாக இருந்தது. அந்த காலகட்டத்தில் ஏதேனும் உயிர்கள் இருந்ததா என்ற சந்தேகம் இன்றும் விஞ்ஞானிகளிடையே நிலவி வருகிறது.

வளிமண்டலம்: பூமியின் வளிமண்டலம் 2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் வித்தியாசமாக இருந்தது. முக்கியமாக, ஆக்சிஜன் அளவு மிகவும் குறைவாக இருந்தது. இன்று நாம் சுவாசிக்கும் காற்றில் 21% ஆக்சிஜன் இருக்கிறது. ஆனால், அந்தக் காலகட்டத்தில் அது வெறும் 1% க்கும் குறைவாகவே இருந்திருக்கலாம். அதன்பிறகு ஆக்சிஜன் அளவு அதிகரிக்கக் காரணம், சயனோபாக்டீரியா எனப்படும் ஒரு வகை பாக்டீரியாக்கள் ஒளிச்சேர்க்கை செய்ததாக நம்பப்படுகிறது. இந்த செயல்பாட்டின் மூலம், கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி ஆக்சிஜனை வெளியிட்டன. இந்த மாற்றம் பூமியின் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. ஏனெனில், ஆக்சிஜன் இல்லாமல் மற்ற உயிரினங்கள் உருவாகியிருக்காது.

2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, கண்டங்களும் முற்றிலும் வித்தியாசமாக இருந்தன. பூமியின் மேற்பரப்பு தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். கண்டங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பிரிந்து, புதிய கண்டங்கள் உருவாகும். இந்த செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில் ஒரு பெரிய நிலப்பகுதி இருந்திருக்கலாம் அல்லது பல சிறிய நிலப்பகுதிகள் இருந்திருக்கலாம்.

இதையும் படியுங்கள்:
Creatinine அளவு அதிகமாக இருக்கா? இந்த இயற்கை வழிகள் உங்களுக்கு உதவும்!  
what the world was like 2 billion years ago?

இந்த காலகட்டத்தில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கத் தொடங்கியதால், உயிரினங்கள் உருவாகத் தொடங்கி இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பழமையான பாறைகளில் கிடைத்த சில தடயங்கள், அந்தக் காலகட்டத்தில் எளிய உயிரினங்கள் இருந்திருக்கலாம் என்று கூறுகின்றன. இந்த உயிரினங்கள் பெரும்பாலும் ஒற்றை செல்களைக் கொண்டிருந்திருக்கலாம்.

2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி எவ்வாறு இருந்தது என்பதை புதிய ஆராய்ச்சிகள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம், நாம் பூமியின் நீண்ட வரலாற்றைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள முடியும்.

logo
Kalki Online
kalkionline.com