பேனா முனையின் பெருமை: படைப்பாளிகளைப் போற்றும் தினம்!

புத்தகங்களை உருவாக்கும் எழுத்தாளர்களின் உழைப்பையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23-ஆம் தேதி உலகப் புத்தகத் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
World book day
World book day
Updated on

ஒரு காலப் பயணம் வாசிப்பின் அவசியத்தையும், புத்தகங்களை உருவாக்கும் எழுத்தாளர்களின் உழைப்பையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23-ஆம் தேதி உலகப் புத்தகத் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

எல்லோருக்கும் ஒரு கேள்வி எழக்கூடும் இது ஏன் ஏப்ரல் 23-ல் கொண்டாடப்படுகிறது? என்று!

இதற்குப் பின்னால் ஒரு சுவாரசியமான தற்செயல் நிகழ்வு உள்ளது. இலக்கிய உலகின் மாபெரும் ஆளுமைகளான வில்லியம் ஷேக்ஸ்பியர், மிகேல் டி செர்வாண்டஸ் மற்றும் இன்கா கார்சிலாசோ டி லா வேகா ஆகிய மூவரும் மறைந்த தினம் ஏப்ரல் 23 (1616-ம் ஆண்டு).

மேலும், பல புகழ்பெற்ற எழுத்தாளர்களின் பிறப்பு மற்றும் இறப்புத் தினங்கள் இந்தத் தேதியோடு இணைந்து வருவதால், புத்தகங்களைக் கொண்டாட இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.

தோற்றம் மற்றும் வரலாறு

புத்தகங்களுக்கென ஒரு நாளை கொண்டாடும் யோசனை முதலில் ஸ்பெயின் நாட்டின் காடலோனியா (Catalonia) பகுதியில் இருந்து தொடங்கியது.

ஸ்பெயினில் ஏப்ரல் 23-ல் ஒரு விசித்திரமான வழக்கம் உண்டு. அங்கு ஆண்கள், பெண்களுக்கு ரோஜா மலர்களையும், பெண்கள், ஆண்களுக்குப் புத்தகங்களையும் பரிசாக அளிப்பார்கள்.

யுனெஸ்கோவின் அங்கீகாரம் எவ்வாறு கிடைத்தது?

1995-ம் ஆண்டுப் பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் நடைபெற்ற யுனெஸ்கோ (UNESCO)பொது மாநாட்டில், புத்தகங்கள் மற்றும் எழுத்தாளர்களைக் கௌரவிக்க ஒரு சர்வதேச தினம் தேவை என்று முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, 1995 ஏப்ரல் 23 அன்று முதல் உலகப் புத்தக தினம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.

வாசிப்புப் பழக்கம்: குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே புத்தகங்களை வாசிக்கும் ஆர்வம் இப்போது குறைந்து வருகிறது. அவர்களின் ஆர்வத்தைத் தூண்டுவது தான் புத்தகத் தினத்தின் நோக்கம்.

இதையும் படியுங்கள்:
உலக புத்தக தினம் - நம் வாழ்க்கையை அழகாக்கும் புத்தகம் வாசிக்கும் பழக்கம்
World book day

பதிப்புரிமை (Copyright): எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது.

புத்தகத் தலைநகரம் (World Book Capital): ஒவ்வொரு ஆண்டும் ஒரு நகரத்தை 'உலகப் புத்தகத் தலைநகரமாக' யுனெஸ்கோ அறிவிக்கும். 2026-ஆம் ஆண்டுக்கான உலகப் புத்தகத் தலைநகரமாகப் பல நகரங்கள் போட்டியிடுகின்றன.

புத்தகங்கள் என்பவை வெறும் தாள்கள் அல்ல; அவை ஒரு மனிதனின் அனுபவத்தை மற்றவர்களுக்குக் கடத்தும் பாலங்கள்.

“ஒரு புத்தகத்தைத் திறக்கும்போது, நீங்கள் ஒரு புதிய உலகத்தையே திறக்கிறீர்கள்” என்பதை உணருங்கள். இந்தப் புத்தகத் தினத்தில் நூல்கள் வாசிக்கும் பழக்கத்தை நாம் மட்டுமல்ல இளம் தலைமுறைக்கும் பழக்கப்படுத்துவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com