ஆகஸ்ட் 29: International Day against Nuclear Tests - ஒரு நாள் அனைத்து அணு ஆயுதங்களும் அழிக்கப்படும்!

International Day against Nuclear Tests
International Day against Nuclear Tests
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

1945 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் நாளில் அணு ஆயுதச் சோதனை தொடங்கியதிலிருந்து, தற்போது வரை 2,000-க்கும் அதிகமான சோதனைகள் நடந்துள்ளன. அணுசக்திச் சோதனையின் தொடக்க நாட்களில், வளிமண்டலச் சோதனைகளால் அணுசக்தி வீழ்ச்சியின் ஆபத்துகள் ஒரு புறம் இருக்க, மனித வாழ்வில் அதன் பேரழிவு விளைவுகளைப் பற்றிச் சிறிது கூடக் கருத்தில் கொள்ளப்படவில்லை. நம் உலக வரலாற்றில் முந்தைய வரலாறுகளைப் படித்துப் பார்த்தால், அணு ஆயுதச் சோதனையின் திகிலூட்டும் மற்றும் சோகமான விளைவுகள் நமக்கு அணு ஆயுதம் குறித்து எச்சரிக்கை விடுக்கின்றன.

இதையெல்லாம் உணர்ந்த கஜகஸ்தான் குடியரசு, 1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 அன்று செமிபாலடின்ஸ்க் அணுசக்திச் சோதனைத் தளம் மூடப்பட்டதை நினைவு கூரும் நோக்கில்,  இந்நாளை அணுசக்திச் சோதனைகளுக்கு எதிரான பன்னாட்டு நாளாகக் கடைப்பிடிக்க வேண்டுமென்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் தீர்மானம் கொண்டு வந்தது. 

2009 ஆம் ஆண்டு டிசம்பர் 2 அன்று நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் 64-வது அமர்வுக் கூட்டத்தில், இத்தீர்மானம் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 29 ஆம் நாள், 'அணுசக்திச் சோதனைகளுக்கு எதிரான நாள்’ (International Day against Nuclear Tests) என்று அறிவிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட அத்தீர்மானத்தில், "அணு ஆயுதச் சோதனை வெடிப்புகள் அல்லது வேறு ஏதேனும் அணு வெடிப்புகளின் விளைவுகள் மற்றும் அணு ஆயுதம் இல்லாத உலகத்தின் இலக்கை அடைவதற்கான வழிமுறைகளில் ஒன்றாக, அவை நிறுத்தப்பட வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வு மற்றும் கல்வியை அதிகரிக்க வேண்டும்" என்று அழைப்பு விடுக்கிறது. 

2010 ஆம் ஆண்டு அணுசக்தி சோதனைகளுக்கு எதிரான பன்னாட்டு நாளின் தொடக்க நினைவாகக் குறிக்கப்பட்டது. ஒவ்வொரு வருடத்திலும், உலகெங்கிலும் கருத்தரங்குகள், மாநாடுகள், கண்காட்சிகள், போட்டிகள், வெளியீடுகள், விரிவுரைகள், ஊடக ஒளிபரப்புகள் மற்றும் பிற முயற்சிகள் என்று பல்வேறு செயல்பாடுகளை ஒருங்கிணைத்து இந்நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

இந்நாள் நிறுவப்பட்டதிலிருந்து, இருதரப்பு மற்றும் பலதரப்பு அரசாங்க நிலை முன்னேற்றங்கள் மற்றும் குடிமைச் சமூகத்தில் பரந்த இயக்கங்கள் அணுசக்தி சோதனைகளைத் தடை செய்வதற்கான காரணத்தை முன்னெடுக்க உதவியுள்ளன. 

அதன் பிறகு, "அணுவாயுதங்களைப் பயன்படுத்துதல் அல்லது அச்சுறுத்தல் ஆகியவற்றிற்கு எதிரான ஒரே முழுமையான உத்தரவாதம் அணு ஆயுதக் குறைப்பு மற்றும் அணுவாயுதங்களை முற்றிலுமாக அகற்றுவது மட்டுமே" என்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபை, செப்டம்பர் 26 ஆம் நாளை, "அணு ஆயுதங்களை மொத்தமாக ஒழிப்பதற்கான பன்னாட்டு நாள்" என்று அறிவித்தது. 

அணு ஆயுதங்களை மொத்தமாக ஒழிப்பதற்கான பன்னாட்டு நாள் முதல் முறையாக 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கடைப்பிடிக்கப்பட்டது. பிற நிகழ்வுகள் மற்றும் செயல்கள், அணு ஆயுதங்கள் இல்லாத உலகத்திற்காக வலுவாக வாதிடும் உலகளாவிய சூழலை வளர்த்தெடுத்துள்ளது. 

இதையும் படியுங்கள்:
அணுவிலிருந்து மின்சாரம் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது?
International Day against Nuclear Tests

அனைத்து வகையான அணுசக்தி சோதனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கான பன்னாட்டுக் கருவியாக அமைந்திருப்பது, 1996 ஆம் ஆண்டு விரிவான அணு சோதனைத் தடை ஒப்பந்தம் (Comprehensive Nuclear-Test-Ban Treaty - CTBT) ஆகும். துரதிர்ஷ்டவசமாக, இது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

ஒரு நாள் அனைத்து அணு ஆயுதங்களும் அழிக்கப்படும் என்பது ஐ.நா.வின் நம்பிக்கை. அதுவரை, அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் உலகம் செயல்படும் நிலையில் அணுசக்தி சோதனைகளுக்கு எதிரான பன்னாட்டு நாளைக் கடைபிடிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com