இன்றைய நாளில் காற்று மாசுபாடு ஏற்படுத்தாமல், நம் மனத்திலுள்ள தீய, வேண்டாத எண்ணங்களை அழிப்போம்!

Bhogi Festival
Bhogi Festival
Published on

தமிழ் நாட்காட்டியில் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று, அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடுகின்ற பண்டிகையாக போகி (Bhogi) இருக்கிறது. இந்தப் போகிப் பண்டிகை தமிழ்நாடு, கர்நாடகா ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. வீட்டிலுள்ள பழைய பொருட்களையும், பயனற்றவைகளையும் அப்புறப்படுத்தும் போது, அவற்றை அழித்துப் போக்கும் பண்டிகையாகக் கொண்டு போக்கும் பண்டிகை என்றழைத்து, பின்னாளில், போகிப் பண்டிகை என பெயர் மாறிவிட்டது என்று சொல்கின்றனர்.

வீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களைப் புறக்கணித்து, வீட்டில் புதியன வந்து சேர்ந்திட வேண்டும் என்கிற தொன்ம நம்பிக்கையில் மக்கள் போகிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். அன்றைய நாள், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் மற்றும் தேவையற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும் முறை கடைப்பிடிக்கப்படுகிறது.

"ருத்ர கீதை ஞான யக்ஞம்" என அழைக்கப்படும் அக்னி குண்டத்தில், வீட்டிலுள்ள தேவையற்ற பொருட்களை எரிக்கும் போது, நம் மனதில் தேங்கிக் கிடக்கும் பழைய பழக்கங்கள், ஒழுக்கக்கேடுகள், உறவுகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் போன்ற வேண்டத்தகாத எண்ணங்களையும் தனக்குள்ளாகவே எறித்துப் பொசுக்கி, மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும், தவறான எண்ணங்களையும் நீக்க வேண்டும். பல்வேறு தெய்வீகக் குணங்களை தூண்டுவதன் மூலம் ஆன்மாவை உணர்தல், ஆன்மாவை தூய்மையாக்குதல் போன்ற செயல்பாடுகளை இப்பண்டிகை பிரதிபலிக்கிறது. பெரும் பொங்கல், மகர சங்கராந்தி மற்றும் லோரி எனப்படும் பண்டிகைக்கு முந்தைய நாளில் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பொங்கல் தினத்தன்று கடவுள் வீட்டுக்குள் வர செய்ய வேண்டிய 7 விஷயங்கள்!
Bhogi Festival

இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி கோலம் இட்டு அழகுபடுத்தும் வழக்கம் இருக்கிறது. போகி அன்று, வைகறையில் 'நிலைப்பொங்கல்' நிகழ்வுறும். வீட்டின் முன்வாயில் நிலைக்குப் மஞ்சள் பூசி, திலகமிட்டு, தோகை விரிந்த கரும்பொன்றைச் சாத்தி நிற்கச் செய்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி இல்லுறை தெய்வத்தை வணங்குவர். சிறு மணித்துளிகளில் இது முடிவுறும். இதைக் குடும்பத்தலைவியே நடத்துவார். போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம், மொச்சை, சிறுதானியங்கள், பருப்பு வகைகள் போன்றவை இறைவனுக்கு படைக்கப்பட்டு, பின்னர் உண்ணப்படுகிறது. இந்நாளில் மழை தரும் வருண பகவானுக்கு நன்றி செலுத்தப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பொங்கலுக்கு வீட்டை சுத்தம் செய்யும்போது கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்!
Bhogi Festival

தற்காலத்தில் காற்று மாசுபடும் என்பதால், பழைய பொருட்களை நெருப்பிட்டு அழிக்கும் வழக்கம் குறைந்து போய்விட்டது. இன்றைய நாளில், நாம் நம் மனத்திலுள்ள தீய, வேண்டாத எண்ணங்களை அழித்து, நல்லெண்ணங்களுடன் நல்லவைகளைத் தொடர்ந்து செய்திட முன் வர வேண்டும் என்று உறுதி மேற்கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com