#Breaking: காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ ரெய்டு!

#Breaking: காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ ரெய்டு!

Published on

காங்கிரஸ் மூத்த தலைவரும்,முன்னாள் மத்திய அமைச்சருமான . சிதம்பரத்தின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய பல இடங்களில் மத்திய புலனாய்வு துறை சோதனை நடத்தி வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. அதன்படி டெல்லி,மும்பை சென்னை மற்றும் சிவகங்கையில் சோதனை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

-இதுகுறித்து புலனாய்வுத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப் பட்டதாவது:

காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்தின்  மகனும் எம்பி-யுமான கார்த்தி சிதம்பரத்திற்கு தொடர்பான நிறுவனங்களுக்கு 2010 மற்றும் 2014 ஆகிய வருடங்களுக்கு இடையே வெளிநாட்டில் இருந்து பணம் வந்தது தொடர்பாக,முன்னாள் அமைச்சர் .சிதம்பரம் மற்றும் அவரது மகன் தொடர்புடைய ஏழு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. 

ஏற்கனவே, ஏர்செல்மேக்சிஸ் வழக்கு தொடர்பாக ப. சிதமபத்தின்  வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகளும் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com