குடி பட்வா குடி (வெற்றிக்கம்பம்) - இது ஒரு வசந்த காலத்திருவிழா!

Gudi Padwa Gudi (Vetrikambam) - This is a spring festival!
Gudi Padwa Gudi festivalImage credit - magicbricks.com
மும்பை மீனலதா

வணக்கம். ஆர். மீனலதாவாகிய அடியேன், என்னைப் பற்றிய சில வரிகளைத் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். **சிறு வயது முதலேயே, என்னுடன் ஐக்கியமான எழுத்து, நடிப்பு, பேச்சு, பாட்டு, விளையாட்டு, பிறர்க்கு உதவுவது, புது மாதிரியாக யோசித்து ஆர்வத்துடன் செயல்படுவது போன்ற பல செயல்கள், சீனியர் சிட்டிசன் ஆன பிறகும் தொடர்கிறது. (சகலகலாவல்லி என்று அநேகர் என்னைக் குறித்து கூறுவதுண்டு😊) **கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறேன். **தமிழார்வம் கொண்டவள். **அனைத்தும் டிஜிட்டல் மயமாக ஆனபோதிலும், எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, எழுதுவதை அதிகம் விரும்புபவள். **கட்டுரை, நேர்காணல், சிறுகதை, சமையல், மோட்டிவேஷன், நகைச்சுவைக்கதை போன்ற பல்வேறு விஷயங்களைக் குறித்து எழுதி வருகிறேன். **பத்திரிகைகள் அளிக்கும் ஆதரவு, புது விஷயம் எழுத அளிக்கும் தூண்டுதல், அவ்வப்போது அவர்கள் கொடுக்கும் அருமையான டிப்ஸ் ஆகியவைகள் எனது எழுத்தினை மேன்மேலும் மெருகூட்ட மிகவும் உதவியாக உள்ளன.

Updated on

குடி பட்வா மராத்தியர்களின் புத்தாண்டு நாளாகும்.  வெற்றிக் கம்பம் அல்லது வெற்றிக்கொடி, "குடி" (GUDI) எனப்படும். பட்வா (பத்வா) என்ற சொல் சம்ஸ்கிருதத்தின் பிரதிபாத் என்ற சொல்லில் இருந்து தோன்றியது. பிரதிபாத் என்பது,  நிலவு ஆண்டின் முதல் நாள். "குடி பட்வா" தினம்,  யுகாதியெனப்படும் கன்னட மற்றும் தெலுங்கு வருடப்புத்தாண்டும் ஆகும். மேலும், சிந்திகளால் சேதிசந்த், காஷ்மீரி பண்டிதர்களால் நவ்ரே என்றும் குடிபாட்வா அழைக்கப்படுகிறது.

மராத்தியர்களின் வழக்கப்படி,  குடி பட்வா நாளில் இராமர் இராவணனைக்கொன்று சீதையுடன் அயோத்தி திரும்பினார். அயோத்தி மக்கள் இராமனின் வரவை "குடி" (வெற்றி கம்பம்) நட்டுக் கொண்டாடியதாக கூறப்படுகிறது. ஆனால்,  வட இந்தியாவில் இந்நிகழ்ச்சி, தீபாவளியன்று நடைபெற்றதாகக் கூறுவர்.

குடி பட்வா நாளில்,  மக்கள் புதுத்துணிகள், நகைகள் வாங்குவர். புதிய செயல்களைத் தொடங்க நன்னாளாக குடி பட்வா உள்ளது. குடி பட்வா தினம் குழந்தைகள் சரசுவதிக்குப் பூஜை செய்வர். குடி பட்வா அன்றுதான்,  பிரம்ம தேவன் உலகைப் படைத்ததாக நம்புகின்றனர்.  பூரண் போளி, பூந்தி பாக் போன்ற சிறப்பு இனிப்புகள் குடி பட்வா அன்று செய்யப்படுகின்றன.

மேலும்,  அன்றைய தினம், கசப்பான வேம்பு இலைகள், வேப்பம் பூக்கள்,  இனிப்பு வெல்லம் ( குர், குல் ) ஆகியவைகளைக் கலந்து, புளி, உப்பு சேர்த்து பச்சடி செய்வது வழக்கம். இது வாழ்க்கையின் இனிப்பு மற்றும் கசப்பான அனுபவத்தை நினைவூட்டு வதற்காகவும், வேம்பு சார்ந்த கலவை ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது என்ற நம்பிக்கையாகவும் கருதி உண்ணப்படுகிறது. 

இதையும் படியுங்கள்:
இந்தியாவைப் பார்த்து பொறாமைப்படும்(?) வெளிநாட்டினர் - இதுதான் காரணம்!
Gudi Padwa Gudi (Vetrikambam) - This is a spring festival!

குடி த்வஜா :

குடிக்கு (வெற்றிக் கம்பத்திற்கு) மேல்  பூக்கள், மாம்பழம் மற்றும் வேப்பிலைகளால் மாலை அணிவிக்கப்பட்ட ஒரு நல்ல நிறப்புடவை, வேஷ்டி  அல்லது பிற துணி உபயோகித்து கட்டப்படும். பின்னர்,  அதன் மீது  வெள்ளி அல்லது செம்பு பாத்திரம் தலை கீழாக கவிழ்க்கப்பட்டு, சர்க்கரை படிக மாலை கொண்டு அலங்கரிக்கப்படும். மராத்தியர்களின் வீட்டு வாசல் அல்லது பால்கனியில் வைக்கப்பட்டிருக்கும் இந்த "குடிபாட்வா குடித்வஜா" பார்க்க மிகவும் அழகாக இருக்கும்.  மேலும், அவரவர் வீடுகளில் போடப்பட்டிருக்கும் வண்ணமயமான ரங்கோலிகள், காண்பதற்கு கண்கொள்ளா காட்சியாக திகழும்.

குடி பட்வா நாளில்,   கிராமப்புற சமூகங்கள் சிவபெருமானின் நடனத்தால் பிணைக்கப்பட்டு சிவன் கோயிலில் கூடுவதுண்டு. மகாராஷ்ட்ராவில், குடி பட்வா தினம்,  முகலாயர்களை சத்ரபதி சிவாஜி வென்றதன் நினைவாகவும் கொண்டாடப்படுகிறது.

மக்களின் ஒன்று கூடல், கோவிலுக்கு செல்லுதல், நடனம் ஆடுதல், மற்றும் பல்சுவை பண்டிகை உணவுகளென குடி பட்வா தினம் அமர்க்களப்படும்.

logo
Kalki Online
kalkionline.com