இரட்டை இலை சின்ன வழக்கு: ரூ.25 ஆயிரம் அபராதம்!

இரட்டை இலை சின்ன வழக்கு: ரூ.25 ஆயிரம் அபராதம்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

அதிமுக பொதுக்குழு ஜூலை 11-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அக்கட்சிக்குள் நிலவும் உட்கட்சி பூசல் காரணமாக இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி முன்னாள் அதிமுக உறுப்பினர் ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். 

-அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:

அதிமுக-வில்  ஓபிஎஸ்  மற்றும் ஈபிஎஸ் ஆகியோருக்கு இடையிலான உட்கட்சி மோதல் முடிவுக்கு வரும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்கக் கோரி, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஜூன் 28-ம் தேதி மனு தாக்கல் செய்தேன். அதற்கு இதுவரை எந்த பதிலும் கிடைக்கப் பெறவில்லை. எனவே இந்திய தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட மனு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-இவ்வாறு அதில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதுதொடர்பாக நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:

அதிமுக-வின் இரட்டை இலைச் சின்னத்தை முடக்கக் கோரி, விளம்பர நோக்கத்துடன் மனுதாரர் வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே இந்த வழக்கைத் தொடர்ந்த முன்னாள் அதிமுக உறுப்பினர் ஜோசப்புக்கு  ரூ.25,000 அபராதம் விதிக்கப் படுகிறது.

-இவ்வாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com