கொரிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு தகுதி!

கொரிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு தகுதி!

தென்கொரியாவின் சன்சியான் நகரில் நடக்கும் கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளார்.

கடந்த 5-ஆம் தேதி தொடங்கிய கொரிய ஓப்பன் பேட்மிண்டன் தொடரில் காலிறுதிப் போட்டியில் தென் கொரிய நாட்டு வீரர் சன் வன்ஹோவுக்கு எதிராக கிடாம்பி ஸ்ரீகாந்த் விளையாடி, ஆட்டத்தின் முதல் செட்டில் வென்றார். அதற்கடுத்த 2-வது செட்டில் வன்ஹோ 18-21 என்று புள்ளிகள் கணக்கில் வன்ஹோ வென்றார். பரபரப்பான 3-வது செட் இறுதியாட்டத்தில் 21-12 என புள்ளி கணக்கில் ஸ்ரீகாந்த் வெற்றிபெற்றார்.

இதையடுத்து இத்தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல் வீரராக அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த்.

இதேதொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் பி.வி.சிந்து, தாய்லாந்து வீராங்கனைக்கு எதிராக விளையாடி வரும் நிலையில் முதல் செட்டில் சிந்து முன்னிலை பெற்றுள்ளார்.

மேலும் இத்தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெர்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com