பண்டைய காட்டுத் தோட்டங்கள் முதல் இன்றைய மாடித் தோட்டங்கள் வரை...

மார்ச் 21: உலக நடவு நாள்! மனமகிழ்ச்சி தரும் தோட்டங்கள் அமைப்போம்!
World Planting Day
World Planting Day
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 அன்று உலக நடவு நாள் (World Planting Day) கொண்டாடப்படுகிறது. வீடு மற்றும் தோட்டங்களில் மரங்களை நடவு செய்து, தாவரங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வைப் பரப்பும் நோக்கத்தில், 2007 ஆம் ஆண்டு 'கிரகத்தை நடுவோம்' பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஜெர்மனியில் ஒரு மில்லியன் மரங்களை நடுவதை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்நாள் உலகம் முழுவதும் பரவி, கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாள் மக்களை மரங்களை நடவும், தோட்டக்கலை நடவடிக்கைகளில் ஈடுபடவும் ஊக்குவிக்கிறது.

தோட்டக்கலை (Gardening) என்பது வீட்டுக்கு அருகில், முகப்பிலோ பின்னாலோ தாவரங்களை நட்டு வளர்க்கின்ற நடைமுறையாகும். தோட்டங்களில் அழகூட்டும் தாவரங்கள் அவற்றின் பூக்கள், இலைகள், அல்லது ஒட்டு மொத்தத் தோற்ற வனப்பு கருதி வளர்க்கப்படுகின்றன. கிழங்குகள், கீரைகள், பழங்கள், மூலிகைகள் தரும் தாவரங்களும் உணவுக்காகவும், சாயங்களுக்காகவும், மருத்துவத்துக்காகவும், நறுமணப் பொருட்களுக்காகவும் வளர்க்கப்படுகின்றன. தோட்டக்கலை ஓய்வு கொள்ளும் வேலையாகவும் கருதப்படுகிறது.

சிறிய பழத் தோட்டத்தில் இருந்து, செடிகள், மரங்கள், மூலிகைகள் எனப் பலவகைத் தாவரங்கள் வளர்க்கும் பெருந்தோட்டங்கள் வரை தோட்டவேலை அல்லது தோட்டவளர்ப்பு அமையும். வீட்டுப் புறக்கடையில் வளர்க்கும் வீட்டுத் தோட்டம் முதல், தாழ்வாரங்கள், வீட்டோரங்கள் தொட்டியில் அமையும் மதில்சுவர்த் தோட்டங்கள், கட்டிட உட்புற, வெளிப்புறத் தோட்டங்களாகவும் அமையலாம்.

தோட்ட வளர்ப்பு கடின உழைப்பினை வேண்டுகிறது, ஆழ்ந்த ஈடுபாட்டைக் கோருகிறது. இவை பண்ணைகள், காடுகளை விட செறிவான உழைப்பைக் கோருவதால் அவற்றில் இருந்து பெரிதும் வேறுபட்டுள்ளன.

உலகின் மிகப் பழைய தோட்ட வடிவம் காட்டுத் தோட்டமாகும். இது காடு சார்ந்த உணவு விளைச்சல் களமாகவும் விளங்கியது. காட்டுத் தோட்டம் வரலாற்றுக்கு முந்தையக் காலத்தில் ஆற்றோரமாக அமைந்த காடுகளிலும், பருவக்காற்று மழை வட்டாரங்களின் ஈரமான மலைச் சாரல்களிலும் தோன்றியது. மேலும், அவற்றுக்கு அருகே இருந்த பயன் மரங்களும் கொடிமுந்திரி தாவர இனங்களும் இனம் காணப்பட்டு மேம்படுத்தப்பட்டன. தோட்டத்தின் வேண்டாத் தாவர இனங்கள் நீக்கப்பட்டன. பிறகு, அயல் தாவரங்களும் தெரிவு செய்து தோட்டத்தில் வளர்க்கப்பட்டன.

முதல் நாகரிகங்கள் தோன்றியதும், செல்வந்தர்கள் அழகுக்காகத் தோட்டங்களை வளர்க்கலாயினர். பண்டைய எகுபதியின் கல்லறைத் தோட்ட ஓவியங்களில் கி.மு 1500 ஆண்டளவில் உருவாகிய புதிய அரசாட்சியில் தோட்டமும் நிலக்கிடப்பும் வடிவமைத்ததற்கன சான்றுகள் கிடைத்துள்ளன; அவை, தாமரை மலர்ந்த சிறுகுளங்களையும், பனைமர வரிசையையும் சீரொருமையுடன் திகழும் வேலங்கன்றுகளையும் காட்டுகின்றன. பண்டையத் தோட்ட வடிவமைப்புக்கான சிறந்த எடுத்துக்காட்டு பாபிலோனியத் தொங்கும் தோட்டமாகும். இது பண்டைய ஏழு அதிசயங்களில் ஒன்றாகும். பண்டைய ரோம் நகரில் பத்து தோட்டங்கள் வரை உருவாக்கப்பட்டு, வளர்க்கப்பட்டுள்ளன.

பண்டைய எகிப்து நாட்டுச் செல்வந்தர்கள் நிழலுக்காக தோட்டங்களை வளர்த்துள்ளனர். எகிப்து நாட்டு மக்கள் மரங்களையும் தோட்டங்களையும் கடவுளரோடு தொடர்புப்படுத்தினர். அவர்களின் தெய்வங்கள் தோட்டங்களைக் கண்டு மகிழ்ச்சி கொண்டதாகக் கருதினர். பண்டைய எகிப்தின் தோட்டச் சுவர் ஓரங்களில் மரங்களை வரிசைகளில் நட்டு வளர்த்துள்ளனர். இவற்றில் பரவலாகப் பேரீச்ச மரங்களும், ஊசியிலை மரங்களும், வில்லோ மரங்களும், கொட்டை தரும் மரங்களும் அமைந்திருக்கின்றன. தோட்டங்கள் உயர் சமூக, பொருளியல் செழிப்பின் அறிகுறிகளாகி விட்டன. இவர்கள் திராட்சைத் தோட்டங்களைச் செழிப்பின் அடையாளங்களாக வளர்த்திருக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
'பல்லாண்டுத் தாவரம்’ என்பது எதுவென்று தெரியுமா?
World Planting Day

வீட்டுக்கு அருகாமையில் அமைந்திருக்கும் தோட்டம் வீட்டுத் தோட்டம் எனப்படுகின்றது. பொதுவாகத் தோட்டங்கள் வீட்டைச் சூழ்ந்துள்ள நிலப்பகுதியிலேயே அமைக்கப்படுகின்றன. தற்போது, வீட்டுக் கூரைகள், பலகணித் தொட்டிகள், பலகணிகள் போன்ற பகுதிகளிலும் அமைக்கப்படுகின்றன. கட்டிடங்களுக்குள் தாவரங்களை வளர்ப்பது, 'உள்ளகத் தோட்டக்கலை' எனப்படுகிறது. இங்கு, வீட்டுத் தாவரங்களே வளர்க்கப்படுகின்றன.

சிறு குளங்கள், தடாகங்கள் போன்றவற்றுக்குப் பொருத்தமான தாவரங்களை வளர்ப்பதை, 'நீர்த் தோட்டக்கலை' என்கின்றனர். வீட்டுத் தோட்டங்களில் மட்டுமன்றி, பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள், நெடுஞ்சாலையோரங்கள், சுற்றுலாப்பகுதிகள் போன்றவற்றிலும் தோட்டக்கலை அறிவு பயன்படுகிறது.

தோட்டங்களில் இருக்கும் தாவரங்களின் பசுமை, அதிலிருந்து கிடைக்கும் காற்று, நிழல் போன்றவை மனிதர்களுக்கு மனமகிழ்ச்சியைத் தருகிறது. மனக் குழப்பமுடையவர்கள் மன அமைதி பெறுவதற்கு தோட்டங்களையே நாடுகின்றனர்.

உலக நடவு நாளில் வீட்டுக்கு அருகில் இடமிருந்தால், நமக்கு நிழலுடன் வேறு பலன் தரக்கூடிய மரங்களை இன்று நடவு செய்து பராமரித்து வளர்க்க முயற்சிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
வான்வழி வேர்களை கொண்ட தாவரங்கள்!
World Planting Day
logo
Kalki Online
kalkionline.com