ஒலி ஒளிமுறைக் காட்சிகள் அனைத்தும் எண்ணிம வடிவத்திற்கு மாற்ற வேண்டும்!

அக்டோபர் 27: உலக ஒலி ஒளிமுறை மரபுடைமை நாள்!
World Day for Audiovisual Heritage
World Day for Audiovisual HeritageImg Credit: Freepik
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் (UNESCO) 1980 ஆம் ஆண்டு, அக்டோபர் 27 ஆம் நாளில் நடைபெற்ற 21 வது பொது மாநாட்டில், நகரும் படங்களைப் பாதுகாத்தல் மற்றும் பராமரிப்பதற்கான பரிந்துரையை ஏற்று, உலகெங்கும் உள்ள ஒலி ஒளிமுறை காப்பகங்கள், ஒலி ஒளிமுறை மரபுடமையை நினைவு கொள்ளும் வழியில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27 ஆம் நாளை ‘உலக ஒலி ஒளிமுறை மரபுடைமை நாள்’ (World Day for Audiovisual Heritage) என்று கொண்டாட வேண்டும் என்று அறிவித்தது. 

அதனைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (UNESCO) மற்றும் ஒலி ஒளிமுறை காப்பகச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு (Coordinating Council of Audiovisual Archives Associations - CCAAA) ஆகியவற்றின் முன் முயற்சிகளுடன், ஒலி ஒளிமுறைக் காப்பகங்களைக் கொண்டாடும் நாளாகவும், ஒலி ஒளிமுறைப் பொருட்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும், அவற்றைப் பாதுகாக்காமல் அல்லது பராமரிக்காமல் விட்டால் என்னவாகும்? என்பதைப் பற்றி எடுத்துரைக்கும் விழிப்புணர்வு நாளாகவும் இந்நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

ஒலி ஒளிமுறை மரபுடமையானது, நாம் கலந்து கொள்ளாத நிகழ்வுகளைக் காணவும், கடந்த காலத்தின் குரல்களைக் கேட்கவும், தகவல் மற்றும் மகிழ்விக்கும் கதைகளை உருவாக்கவும் உதவுகிறது. திரைப்படம் மற்றும் நிகழ்படங்களில் பதிவு செய்யப்பட்ட ஒலிகள் மற்றும் காட்சிப் படிமங்களை ஆராய்வதன் வழியாக, கலாச்சாரச் செல்வத்திற்கான மதிப்பைப் பெறுவது மட்டுமல்லாமல், அதிலிருந்து மதிப்புமிக்க படிப்பினைகளையும் பெறமுடியும். ஒலி ஒளிமுறைப் பொருட்கள், உங்கள் கதை, உங்கள் உண்மை மற்றும் உங்கள் இருப்பைச் சொல்கின்றன. அவை உலகிற்கு ஒரு சாளரத்தை வழங்குகின்றன.

உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கை மற்றும் கலாச்சாரங்கள் பற்றிய கதைகளை ஒலி ஒளிமுறைக் காப்பகங்கள் கொண்டிருக்கின்றன. அவைகளின் வழியாக, விலைமதிப்பற்ற மரபுவழியினை முதன்மைப்படுத்துகின்றன. இதன் வழியில் நமது கூட்டு நினைவகத்தை உறுதிப்படுத்துகிறது. மேலும், சமூகங்களின் கலாச்சார, சமூக மற்றும் மொழியியல் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது. அனைவரும் பகிர்ந்து கொள்ளும் உலகத்தை வளரவும் புரிந்து கொள்ளவும் உதவுகின்றன. இந்த மரபுடமையைப் பாதுகாத்தல் மூலம், பொதுமக்களுக்கும் வருங்கால மரபுடமையினருக்கும் அணுகக்கூடியதாக இருப்பதை உறுதி செய்கின்றன. 

ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம், 2015 ஆம் ஆண்டில் ஆவண மரபுடமையைப் பாதுகாத்தல் மற்றும் அணுகுவது தொடர்பான பரிந்துரைகளைத் தனது உறுப்பு நாடுகளுக்கு வழங்கியிருக்கிறது. அதன் மூலம், உறுப்பு நாடுகள் அனைத்தும், தங்களிடமிருக்கும் பல்வேறு ஒலி ஒளிமுறைக் காட்சிகள் அனைத்தையும் எண்ணிம வடிவத்திற்கு மாற்றம் செய்யும் திட்டத்தை மேற்கொண்டுள்ளன.

logo
Kalki Online
kalkionline.com