ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை ஊக்குவிக்கும் ‘உலக படைப்பாற்றல் மற்றும் புதுமை தினம்’

ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் ஏப்ரல் 21-ந் தேதியை உலக படைப்பாற்றல் மற்றும் புதுமை தினமாக கொண்டாடுகிறது.
World Creativity and Innovation Day
World Creativity and Innovation Day
Published on

உலகப் படைப்பாற்றல் மற்றும் புதுமை தினம் என்பது ஏப்ரல் 21 அன்று(இன்று) கொண்டாடப்படும் ஒரு சர்வதேச தினமாகும். இது, மனித வளர்ச்சியின் அனைத்து அம்சங்களிலும் படைப்பாற்றல் மற்றும் புதுமையின் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் ஏப்ரல் 21-ந் தேதியை உலக படைப்பாற்றல் மற்றும் புதுமை தினமாக கொண்டாடுகிறது. படைப்பாற்றலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. மக்கள் தங்கள் புதுமையான படைப்பாற்றலை பயன்படுத்தி உலகளாவிய பிரச்சினைகளைத் தீர்க்க இந்த நாள் வழிவகுக்கிறது. இதன் மூலம் வறுமை, சமத்துவமின்மை மற்றும் காலநிலை மாற்றம் போன்ற சவால்களை எதிர்கொள்ள முடிகிறது. இதன் முக்கிய நோக்கம் பன்முக சிந்தனையை ஊக்குவிப்பதாகும். 2018-ம் ஆண்டு ஏப்ரல் 21-ந் தேதி உலக படைப்பாற்றல் மற்றும் புதுமை தினம் முதன்முதலாக கொண்டாடப்பட்டது.

2002-ம் ஆண்டு, கனடாவைச் சேர்ந்த பிரபல படைப்பாற்றல் நிபுணரான மார்சி செகல், மனித வளர்ச்சியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கண்டுபிடிப்புகளை உருவாக்க இந்த நாளை நிறுவினார். உலகப் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் படைப்பாற்றல் துறை, அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. புதிய யோசனைகள் மற்றும் முடிவுகளை உருவாக்கவும், ஆக்கப்பூர்வமாக சிந்தித்து பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்க்கைத் தரம் போன்றவற்றை மேம்படுத்தவும் இந்த நாள் உதவுகிறது. அரசாங்கமற்ற நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகளும், படைப்பாற்றல் மற்றும் புதுமை சார்ந்த திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றன.

நோக்கம்:

* மனித வளர்ச்சியின் அனைத்து அம்சங்களிலும் படைப்பாற்றல் மற்றும் புதுமையின் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

* ஆக்கப்பூர்வமான பல்துறைச் சிந்தனையை ஊக்குவித்தல்.

* சிக்கலைத் தீர்ப்பதில் படைப்பாற்றல் மற்றும் புதுமையின் முக்கியத்துவத்தை அங்கீகரித்தல்.

முக்கியத்துவம்:

* படைப்பாற்றல் என்பது நாம் யார், எதை மதிக்கிறோம் என்பதைக் காட்டுகிறது.

* புதுமை என்பது சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது.

* படைப்பாற்றல் மற்றும் புதுமை ஆகிய இரண்டும், சவால்களை எதிர்கொள்ளவும், சிறந்த தீர்வுகளை உருவாக்கவும் உதவுகின்றன.

அனுசரிப்பு:

* ஐக்கிய நாடுகள் சபை ஏப்ரல் 21 ஐ உலகப் படைப்பாற்றல் மற்றும் புதுமை தினமாக நியமித்தது.

* இந்த தினத்தை முன்னிட்டு, உலகம் முழுவதும் பல நிகழ்வுகள் மற்றும் முன்முயற்சிகள் நடத்தப்படுகின்றன, குறிப்பாக கலை, அறிவியல், கல்வி மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில்.

* ஏப்ரல் 15 முதல் 21 வரை உலகப் படைப்பாற்றல் மற்றும் புதுமை வாரமும் அனுசரிக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
வியக்கத்தக்க பலனைத் தரும் படைப்பாற்றல் உத்தி!
World Creativity and Innovation Day

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com