கோவாக்சினுக்கு அங்கீகாரம்: அக்டோபர் 6-ல் ஆலோசனை!

கோவாக்சினுக்கு அங்கீகாரம்: அக்டோபர் 6-ல் ஆலோசனை!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்து உலக சுகாதார அமைப்பு அக்டோபர் 6-ம் தேதி முக்கிய ஆலோசனை நடத்துகிறது

கோவாக்சினை தயாரித்த பாரத் பயோடெக் என்ற ஹைதராபாத் நிறுவனம் கோவாக்சின் பற்றிய அனைத்து தகவல்களையும் உலக சுகாதார அமைப்புக்கு அனுப்பி வைத்துள்ளது. தடுப்பூசியின் செயல்திறன் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் 3 கட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகள் உள்ளிட்ட தகவல்களை அனுப்பியுள்ளது. இந்த தகவல்களை உலக சுகாதார அமைப்பு ஆய்வு செய்து வருகிறது.

கொரோனா தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ளது. அதில் கோவாக்சின் தடுப்பூசி மீது விவாதம் நடத்தப்படும். இறுதியாக நிபுணர் குழு தனது சிபாரிசுகளை அளிக்கும். அதன் அடிப்படையில் கோவாக்சினை அங்கீகரிப்பது பற்றி முடிவு எடுக்கப்பட உள்ளது.

(கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம், அக்டோபர் 6-ம் தேதி ஆலோசனை, உலக சுகாதார அமைப்பு).

logo
Kalki Online
kalkionline.com