சாம்பியன் பட்டம் வென்றார் தமிழகத்தின் வேலவன் செந்தில்குமார்..!

velavan senthilkumar
velavan senthilkumar
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

புதுடெல்லியில் உள்ள தயான் சந்த் தேசிய மைதானத்தில் நடைபெற்ற 81-வது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில், வேலவன் செந்தில்குமார் மற்றும் அனாஹத் சிங் ஆகியோர் முறையே ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டங்களை வென்று அசத்தியுள்ளனர்.

ஆண்கள் இறுதிப் போட்டியில், வேலவன் செந்தில்குமார், முதல் நிலை வீரர் அபய் சிங்கை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், வேலவன் 11-8, 11-9, 4-11, 11-8 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு முறை அபய் சிங்கிடம் தோல்வியடைந்து இரண்டாவது இடத்தையே பிடித்திருந்த வேலவனுக்கு, இது அவரது முதல் தேசிய சாம்பியன்ஷிப் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

2017-ல் பிரிட்டிஷ் ஓபன் பட்டத்தை வென்றது முதல், இந்த இரண்டு நண்பர்களுக்கும் இடையே நீண்டகாலமாக ஒரு போட்டி இருந்து வருகிறது. இந்த இறுதிப்போட்டியிலும் இருவரும் தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். தொழில்நுட்ப ரீதியாக சிறப்பாக ஆடிய வேலவன், அபய்யின் ஆக்ரோஷமான ஆட்டத்திற்கு ஈடுகொடுத்து, நான்காவது செட்டில் அபாரமாக விளையாடி பட்டத்தை உறுதி செய்தார்.

பெண்கள் பிரிவில், 17 வயதே ஆன இளம் வீராங்கனை அனாஹத் சிங், இரண்டாவது நிலை வீராங்கனையான அகான்ஷா சலுங்கேயை 11-7, 11-6, 11-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்த வெற்றியின் மூலம் அனாஹத் சிங், தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக தேசிய சாம்பியன் பட்டத்தை வென்று ஹாட்ரிக் சாதனை படைத்தார். 2022-ல் ஜோஷ்னா சின்னப்பாவிடம் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த அனாஹத், அதன் பிறகு இந்திய ஸ்குவாஷ் விளையாட்டின் புதிய ராணியாக உருவெடுத்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
குறைந்த செலவில் உங்கள் தோட்டத்தைப் பராமரிக்க எளிய குறிப்புகள்!
velavan senthilkumar

சாம்பியன் பட்டம் வென்ற வேலவன் மற்றும் அனாஹத் ஆகியோருக்கு தலா ரூ. 1,30,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ. 75,000 வழங்கப்பட்டது. மேலும், சிறந்த வீரர் விருதை யாஷ் ஃபடேவும், சிறந்த வீராங்கனை விருதை தன்வி கன்னாவும் வென்றனர். பயிற்சியாளர் பிரிவில், அதுல் குமார் யாதவ் பட்டம் வென்று ரூ.50,000 ரொக்கப் பரிசைப் பெற்றார்.

logo
Kalki Online
kalkionline.com