ஒரே இன்னிங்ஸில் 9 சிக்ஸர்கள்… சாதனை மேல் சாதனை படைக்கும் வைபவ் சூர்யவன்ஷி!

Vaibav suryavanshi
Vaibav suryavanshi
Published on

இந்திய யு19 அணியின் இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷி, இங்கிலாந்து யு19 அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தனது மின்னல் வேக ஆட்டத்தால் கிரிக்கெட் உலகை வியக்க வைத்துள்ளார். மழை காரணமாக 40 ஓவர்களாக குறைக்கப்பட்ட இப்போட்டியில், 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி வெறும் 31 பந்துகளில் 86 ரன்கள் குவித்து, அதில் 9 பிரம்மாண்ட சிக்ஸர்களை விளாசி புதிய இந்திய சாதனையை படைத்தார்.

இங்கிலாந்து நிர்ணயித்த 269 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு, வைபவ் சூர்யவன்ஷி ஒரு அதிரடி தொடக்கத்தை வழங்கினார். 20 பந்துகளில் அரைசதம் எட்டிய அவர், ரிஷப் பந்தின் 18 பந்து அரைசத சாதனையை மயிரிழையில் தவறவிட்டார். இருப்பினும், யு19 ஒருநாள் போட்டிகளில் ஒரு இந்திய வீரர் அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் (9) என்ற சாதனையை தன்வசப்படுத்தினார். இதற்கு முன், ராஜ் அங்காத் பாவா மற்றும் மந்தீப் சிங் ஆகியோர் தலா 8 சிக்ஸர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

இந்த தொடர் முழுவதும் வைபவ் சூர்யவன்ஷி மிகச்சிறந்த ஃபார்மில் இருந்து வருகிறார். முதல் போட்டியில் 19 பந்துகளில் 48 ரன்களும், இரண்டாவது போட்டியில் 34 பந்துகளில் 45 ரன்களும் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். தற்போது நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில், 179 ரன்களுடன் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 213.09 என்பது அவரது அதிரடி ஆட்டத்திற்கு சான்றாகும்.

இதையும் படியுங்கள்:
இக்கட்டான நேரத்தில் வெற்றி பெறுவது எப்படி சுலபமாகிறது தெரியுமா?
Vaibav suryavanshi

கடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடி பேட்டிங் மூலம் இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார். இப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. வைபவ் சூர்யவன்ஷியின் இந்த அதிரடி ஆட்டம், இந்திய கிரிக்கெட்டின் இளம் தலைமுறை வீரர்களின் திறமையை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com