பிசிசிஐ-யின் அரசியல் விளையாட்டுக்கு பலியான ரோஹித், கோலி! - முன்னாள் வீரர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

karsan ghavri about Rohit and Virat
karsan ghavri
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலியின் திடீர் டெஸ்ட் ஓய்வு, கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இருவரும் இந்த முடிவை திடீரென எடுத்தனர். இங்கிலாந்து தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், ரோஹித் ஷர்மா தனது சமூக வலைத்தளத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து, சில நாட்களுக்குப் பிறகு கோலியும் அதே முடிவை எடுத்தார்.

இந்த திடீர் முடிவுக்குப் பின்னால் அரசியல் காரணங்கள் இருக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கார்சன் காவ்ரி குற்றம் சாட்டியுள்ளார். விகே லால்வானி ஷோ-வில் பேசிய அவர், கோலி மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியிருக்கலாம் என்று கூறினார். அத்துடன், பிசிசிஐ சார்பில் கோலிக்கு முறையான பிரியாவிடை கூட அளிக்கப்படவில்லை என்றும் வருத்தத்துடன் தெரிவித்தார்.

காவ்ரியின் குற்றச்சாட்டுகள்:

"கோலியின் திடீர் ஓய்வு ஒரு மர்மம். அவர் இன்னும் இரண்டு வருடங்கள் தொடர்ந்து விளையாடியிருக்கலாம். ஆனால், ஏதோ ஒன்று அவரை கட்டாயப்படுத்தி ஓய்வு பெறச் செய்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக, அவர் ஓய்வு பெற்றபோது பிசிசிஐ அவருக்கு முறையான பிரியாவிடை அளிக்கவில்லை. பிசிசிஐ-க்கும், இந்திய கிரிக்கெட்டுக்கும், ரசிகர்களுக்கும் இவ்வளவு சேவை செய்த ஒரு மகத்தான வீரருக்கு சிறப்பான பிரியாவிடை வழங்கியிருக்க வேண்டும்," என்று காவ்ரி குறிப்பிட்டார்.

இதையும் படியுங்கள்:
ஹரித்வார்: ஆன்மிகமும் இயற்கையும் இணையும் புண்ணிய பூமி!
karsan ghavri about Rohit and Virat

கோலியும் ரோஹித் ஷர்மாவும் இந்திய அணி நிர்வாகத்தின் உள்நாட்டு அரசியலுக்கு பலியாகிவிட்டனர் என்றும் காவ்ரி ஒரு பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். "பிசிசிஐ-க்குள் நடக்கும் உள்நாட்டு அரசியல் புரிந்து கொள்ள முடியாதது. இதுவே கோலி முன்கூட்டியே ஓய்வு பெறுவதற்கு காரணமாக இருக்கலாம். ரோஹித் ஷர்மாவும் முன்கூட்டியே ஓய்வு பெற்றார். அவர்கள் வெளியேறும்படி கேட்கப்பட்டனர். அவர்கள் தானாக வெளியேற விரும்பவில்லை. தொடர்ந்து விளையாடவே விரும்பினார்கள். ஆனால், தேர்வுக் குழுவுக்கும், பிசிசிஐ-க்கும் வெவ்வேறு திட்டங்கள் இருந்தன. இது ஒருவித அற்ப அரசியல்," என காவ்ரி கூறினார்.

ரோஹித் மற்றும் கோலியின் ஒருநாள் போட்டி எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com