சுனில் கவாஸ்கருக்கு சிலை வைக்கப்போவதாக கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு!

Sunil gavaskar
Sunil gavaskar
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கருக்கு மும்பை வான்கடே மைதானத்தில் சிலை அமைக்க மும்பை கிரிக்கெட் சங்கம் (MCA) முடிவு செய்துள்ளது. இதுகுறித்து MCA தலைவர் அமேய்கா கால்கர் செய்தியாளர் சந்திப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

மும்பை கிரிக்கெட்டின் பெருமையை பறைசாற்றும் வகையில், வான்கடே மைதானத்தில் புதிய அருங்காட்சியகம் ஒன்றை மும்பை கிரிக்கெட் சங்கம் அமைக்கவுள்ளது. இந்த அருங்காட்சியகத்திற்கு 'ஷரத் பவார் அருங்காட்சியகம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தின் நுழைவாயிலில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் மற்றும் முன்னாள் பிசிசிஐ தலைவரான ஷரத் பவார் ஆகியோருக்கு ஆளுயரச் சிலைகள் வைக்கப்படும் என மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகக் குழு அறிவித்துள்ளது. கிரிக்கெட் உலகில் இவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கவாஸ்கர், டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமைக்குரியவர். அவரது சாதனைகளும், பங்களிப்புகளும் இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு பெரும் உந்துதலாக அமைந்தவை.

அதேபோல், ஷரத் பவார், பிசிசிஐ மற்றும் ஐசிசி ஆகியவற்றின் தலைவராக பதவி வகித்து, கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான பங்களிப்பை அளித்துள்ளார். அவரது தலைமைப் பண்பும், நிர்வாகத் திறனும் பல மாற்றங்களைக் கொண்டு வந்தன.

இந்த அருங்காட்சியகம், மும்பை கிரிக்கெட்டின் வரலாற்றை ஆவணப்படுத்தும் ஒரு முக்கிய இடமாக அமையும். இதில், மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களின் சாதனைகள், பயன்படுத்திய பொருட்கள் மற்றும் முக்கிய தருணங்கள் இடம்பெறும். ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாம் பாதியில் இந்த அருங்காட்சியகம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
#BREAKING : துணை ஜனாதிபதி தேர்தல் தேதி அறிவிப்பு..!
Sunil gavaskar

இந்திய கிரிக்கெட்டின் பொற்காலத்தை தொடங்கி வைத்தவர்களில் மிக முக்கியமானவர் சுனில் கவாஸ்கர். திறமையற்ற பேட்ஸ்மேன்கள் என்று கூறப்பட்ட இந்திய அணியை, உலக அரங்கில் தலைநிமிரச் செய்ததில் அவரது பங்களிப்பு மிக அதிகம். மேற்கிந்தியத் தீவுகளின் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராகத் துணிச்சலுடன் நின்று, பந்துவீச்சாளர்களின் அச்சத்தை தகர்த்தெறிந்தவர்.

அவரது கிரிக்கெட் சாதனைகள், இளம் தலைமுறையினருக்கு ஒரு உத்வேகமாக இருந்து வருகிறது. முதல் முறையாக 10,000 டெஸ்ட் ரன்களை கடந்தவர் என்ற பெருமைக்குரியவர் கவாஸ்கர். மேலும், அவர் ஆட்டத்தின் தூய்மையைப் பாதுகாத்தவர். எந்தவொரு போட்டியிலும் தனது திறமையையும், மன உறுதியையும் விட்டுக்கொடுக்காதவர்.

இது குறித்து MCA தலைவர் அமேய்கா கூறுகையில், "இந்திய கிரிக்கெட்டின் மாபெரும் வீரர்களில் ஒருவர் கவாஸ்கர். அவரது பங்களிப்பு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. மும்பை மைதானத்தில் அவருக்கு சிலை வைப்பது, எங்களது நீண்ட நாள் கனவு. இது இளம் தலைமுறையினருக்கு ஒரு உத்வேகமாக இருக்கும். அவர்கள் கவாஸ்கரின் சாதனைகளைப் பார்த்து வளர்வார்கள்." என்று தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்:
உங்களுடன் விளையாட முடியாது- இந்திய வீரர்களின் முடிவால், நேரடியாக இறுதிபோட்டிக்கு சென்ற பாகிஸ்தான்!
Sunil gavaskar

தற்போது சச்சின் டெண்டுல்கருக்கு மட்டுமே வாங்கேடே மைதானத்தில் சிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கவாஸ்கருக்கு சிலை வைப்பதன் மூலம், மும்பை கிரிக்கெட் சங்கம், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களைப் பெருமைப்படுத்துகிறது. இது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலை திறப்பு விழா குறித்த விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com