

அயர்லாந்து நாட்டில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. தொடரில் முதல் போட்டி பெல்பாஸ்ட் நகரில் உள்ள ஸ்டார்மாண்ட் மைதானத்தில் நடைபெற்றது. டாசை வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சினை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங்கை ஆரம்பித்த அயர்லாந்து அணி ஆரம்ப முதலிலேயே தடுமாறி ரன்கள் எடுத்து வந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டிம் டெக்கர் 17 ரன்களும் ரோஸ் அடைர் 12 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தனர். 2 வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த லார்கன் டக்கர் மிகவும் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 50 ரன்களை குவித்தார். இதில் 5 பவுண்டரிகளும் 2 சிக்சர்களும் அடங்கும். அந்த அணியின் பேட்டர் கரத் டெலனியம் 49 ரன்கள் சேர்க்க அயர்லாந்து அணி 100 ரன்களை கடந்தது. அயர்லாந்து அணியின் வீரர்கள் சராசரியாக விளையாடி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களை குவித்தனர்.
190 ரன்களை இலக்காக கொண்டு இந்திய அணி விரட்டலை ஆரம்பித்தது. இந்திய அணிக்கு மிகவும் அதிரடியான துவக்கத்தினை அபிஷேக் ஷர்மா கொடுத்தார். 20 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 50 ரன்களை குவித்தார். ஆனால் , மறுபுறம் அவருக்கு ஒத்துழைப்பை கொடுக்க யாருமே இல்லை. 2 ஓவர்களுக்கு 1 விக்கெட் என்ற கணக்கில் இந்திய அணியின் பேட்ஸ்மென்கள் சரிந்து கொண்டிருந்தனர்.
சஞ்சு சாம்சன் 5 ரன்கள் , இஷான் 1 ரன் , கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 3 ரன்கள் , வாஷிங்டன் சுந்தர் 9 ரன்கள் என இந்திய அணியின் முக்கிய ஆட்டக்காரர்கள் அனைவரும் சொதப்பி எடுத்தனர். 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி படுதோல்வி அடைந்தது. அயர்லாந்து அணி தனது வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணியை வெற்றி கொண்டது.
அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளில் அயர்லாந்து இந்திய அணியை இதுவரை வென்றதில்லை என்பது வரலாறு. அது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அயர்லாந்து அணியின் பவுலர் மேத்யூ ஹோலார்ட் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். இந்திய அணியின் சுற்றுப்பயணத்தினை அயர்லாந்து மீடியாக்கள் பெரிய அளவில் விளம்பரம் கொடுத்தன. இந்த சுற்றுப்பயணத்தில் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாவார் என்று சர்வதேச கிரிக்கெட் பிளேயர்களும் ரசிகர்களும் மிகவும் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த போட்டியில் அவர் களம் இறக்கப்படவில்லை.
இந்த வரலாற்று தோல்வி இந்திய அணியை கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மிகவும் பொறுப்பற்ற முறையில் விளையாடியுள்ளனர். டி20 சாம்பியன் அணி , ஒரு வளரும் அணியிடம் மோசமான முறையில் தோல்வியுற்றது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. நேற்றைய போட்டியில் வைபவை களம் இறக்காததும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.
கேப்டனாக பொறுப்பேற்ற தனது முதல் போட்டியிலேயே ஷ்ரேயாஸ்சின் இந்த தோல்வி அவருக்கு அதிக அழுத்தத்தை கொடுத்துள்ளது. 2 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் இனி இந்திய அணி வெற்றி பெற்றால் கூட தொடரை கைப்பற்ற முடியாத நிலையில் உள்ளது.