ஆசியக் கோப்பை கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி!

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, பாகிஸ்தான் த்ரில் வெற்றி பெற்றது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 27-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடைப்பெற்று வருகிறது.துபாயில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், ரோஹித் ஷர்மா களமிறங்கினார். இருவரும் இந்திய அணிக்கு அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர்.

இதையும் படியுங்கள்:
ஆசியக் கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை வென்றது இந்தியா!
ஆசியக் கோப்பை கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி!

இந்த ஜோடி 5.1 ஓவர்களில் 54 ரன்கள் சேர்த்தது.அதிரடியாக ஆடிய ரோஹித் 2 சிக்ஸர்,3 பவுண்டரிகள் எடுத்த நிலையில் 28 ரன்களில் அவுட் ஆனார். இதனையடுத்து விராட் கோலி களமிறங்கி 60 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது.

பின்னர் களம் இறங்கிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் ஆசம் 14 ரன்களிலும், ஃபக்கார் சமான் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.பின்னர் தொடக்க ஆட்டக்காரர் ரிஸ்வான்  71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் 18-வது ஓவரின் 3-வது பந்தில் ஆசிப் அலி அடித்த பந்தை இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் பிடிக்க முயன்று தவற விட, இதுவே ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது.

பாகிஸ்தான் கடைசி ஓவரில் 2 பந்துகளுக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 182 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது பாகிஸ்தான் வீரர் முகமது நவாசுக்கு வழங்கப்பட்டது.

சூப்பர் 4 சுற்றின் அடுத்த ஆட்டத்தில் இலங்கை அணியை இந்தியா நாளை எதிர் கொள்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com