ரஜினிகாந்த் வசனத்தை பச்சைக் குத்திய நியூசிலாந்து பவுலர்!

aditya ashok
aditya ashok
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் இளம் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் ஆதித்யா அசோக், தனது ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, உலகெங்கும் உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். இவர் தனது கையில், ரஜினிகாந்தின் புகழ்பெற்ற திரைப்படமான ‘படையப்பா’வில் இடம்பெற்ற “என் வழி தனி வழி” என்ற புகழ்பெற்ற வசனத்தைப் பச்சை குத்தியுள்ளார்.

கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்து வரும் ஆதித்யா அசோக், சமீபத்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இந்தப் பச்சை குத்திய செய்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது கிரிக்கெட் வட்டாரத்திலும், தமிழ் சினிமா ரசிகர்களிடையேயும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

ஆதித்யா அசோக் வெளிநாட்டில் பிறந்தாலும், அவரது குடும்பம் தமிழ்ப் பாரம்பரியத்தைக் கொண்டது. ரஜினிகாந்தின் திரைப்படங்களையும், அவரது பஞ்ச் வசனங்களையும் ஆதித்யா மிகவும் விரும்புவதாகவும், குறிப்பாக ‘படையப்பா’ படத்தின் “என் வழி தனி வழி” வசனம் அவரை மிகவும் கவர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஒரு உணர்வுப்பூர்வமான கதையையும் தெரிவித்தார். “என் தாத்தா உயிரிழப்பதற்கு சில நாட்கள் முன் படையப்பா படம் குறித்து நானும் அவரும் பேசினோம். அவர் இறந்த பிறகு அவரின் நினைவாக அந்தப் படத்தில் வரும் வசனத்தை பச்சை குத்தினேன். இதன்மூலம் அவருக்கு அஞ்சலி செலுத்தியது போல் இருக்கும்.” என்று பேசினார்.

இதையும் படியுங்கள்:
மோதிரம் அணிவதில் இத்தனை ரகசியம் இருக்கா?
aditya ashok

இந்தச் செய்தி வெளியான உடனேயே, ரஜினிகாந்த் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூக வலைத்தளங்களில் ஆதித்யா அசோக்கின் இந்தப் புகைப்படம் வைரலாகப் பரவி வருகிறது. ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரர் தமிழ் சினிமாவின் ஒரு பஞ்ச் வசனத்தைப் பச்சை குத்தியிருப்பது, தமிழ் மொழிக்கும், தமிழ் சினிமாவுக்கும் கிடைத்த பெருமையாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நியூசிலாந்து அணிக்காக தனது முத்திரையைப் பதித்து வரும் ஆதித்யா அசோக், தனது திறமையால் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறார். இப்போது, தனது கையில் ரஜினியின் புகழ்பெற்ற வசனத்தைப் பச்சை குத்தி, அவர் மேலும் பல ரசிகர்களின் மனதிலும் குறிப்பாக தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com