ரிஷப் பண்ட் நல்ல வீரர்தான்… ஆனால்… - கங்குலி ஓபன் டாக்!

Rishab pant with ganguly
Rishab pant with ganguly
Updated on

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். அவரது பேட்டிங் அணுகுமுறை குறித்து முன்னாள் இந்திய கேப்டன் சௌரவ் கங்குலி சில முக்கிய கருத்துக்களை முன்வைத்துள்ளார். வரவிருக்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக, பண்ட்டுக்கு கங்குலி ஒரு தெளிவான செய்தியை வழங்கியுள்ளார்.

சௌரவ் கங்குலி, ரிஷப் பண்ட்டை "மிகச் சிறந்த வீரர்" என்று அவர் பாராட்டினாலும், அவரது ஷாட் தேர்வு குறித்து சில கவலைகளை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, 2024-25 பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவில் பண்ட்டின் ஆட்டத்தைக் குறிப்பிட்ட கங்குலி, "அவர் மிகவும் அதிரடியான ஷாட்களை ஆடினார். தொடர்ந்து பேட்டை சுழற்றிக் கொண்டிருந்தார். அது எனக்குப் பிடிக்கவில்லை" என்று தெரிவித்தார். பந்து ஸ்விங் ஆகும் சூழ்நிலைகளில், பண்ட் இன்னும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும், அதிரடியான ஷாட்களைத் தவிர்த்து நிதானமான இன்னிங்ஸ்களை ஆட வேண்டும் என்றும் கங்குலி அறிவுறுத்தியுள்ளார்.

பண்ட் ஒரு வலுவான தடுப்பாட்ட நுட்பத்தைக் கொண்டவர் என்று சுட்டிக்காட்டிய கங்குலி, அவர் அதை அதிகமாக நம்பி விளையாட வேண்டும் என்று வலியுறுத்தினார். "அவர் தனது பழைய பாணிக்குத் திரும்ப வேண்டும். அவர் அதிகமாக சண்டை போட்டு ஆட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவருக்கு நல்ல தடுப்பாட்டம் உள்ளது, எனவே அவர் அதை பயன்படுத்த வேண்டும், ஒவ்வொரு பந்தையும் அடிக்க முயற்சி செய்யக்கூடாது" என்று கங்குலி RevSportz-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்:
முதியோர்களுக்கு செய்துத் தரும் வசதிகள் அவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன்!
Rishab pant with ganguly

இங்கிலாந்து சுற்றுப்பயணம் ரிஷப் பண்ட்டுக்கு ஒரு புதிய அத்தியாயமாக அமையும். மேலும், இத்தொடரில் அவர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கங்குலியின் இந்த அறிவுரைகள், பண்ட் தனது ஆட்டத்தில் மேலும் கவனம் செலுத்தி, இங்கிலாந்து மண்ணில் இந்தியாவின் வெற்றிக்கு வலு சேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com