இந்தியாவில் உலகக் கோப்பை ஆக்கித் தொடர்!

இந்தியாவில் உலகக் கோப்பை ஆக்கித் தொடர்!
Updated on

ந்தியாவில் 15வது உலகக் கோப்பை ஆக்கித் தொடர் ஒடிஸா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலா என இரண்டு நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன.

ஜனவரி 13 முதல் 29 வரை நடக்கும் இப்போட்டியில் மொத்தம் 16 நாட்டு அணிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளைக் காட்ட உள்ளன. நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இப்போட்டியில் இந்திய அணி டி பிரிவில் விளையாடவுள்ளது.

இதற்கிடையில் ஹர்மன்ப்ரீத்சிங் தலைமையில் விளையாட உள்ள இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும் பட்சத்தில், இந்திய வீரர்களுக்கு தலா 25 லட்சம் ரொக்கத்தொகை வழங்குவதாக ஆக்கி இந்தியா சம்மேளனம் அறிவித்துள்ளது.

இந்திய ஆக்கி அணி வெற்றி பெற வாழ்த்துவோம்.

logo
Kalki Online
kalkionline.com