உடலின் நீர்ச்சத்தை சரி செய்யும் 5 விதமான மோர்கள்!

நீர்ச்சத்து பானம்
நீர்ச்சத்து பானம்
Published on

டலுக்கு மிகவும் அவசியமான ஒன்று நீர்ச்சத்து. நீர்ச்சத்து இல்லை என்றால் நமது உடல் நலனின் ஆரோக்கியத்தில் சகலமும் போய்விடும் என்று கூறினால் அது மிகையல்ல. இது கோடைக் காலங்களில் மட்டும் நமக்குக் குறையாது, மழைக்காலம், பனி காலங்களில் கூட குறையும். அதற்குக் காரணங்கள் நாம் சரியாக நீர் அருந்தாமல் இருப்பதுதான். உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருப்பதற்காக அருந்த வேண்டிய 5 விதமான மோர்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. நீர் மோர்: தயிரைக் கடைந்து மோர் ஆக்கவும். அதில் நீர் விட்டுப் பெருக்கவும். அதோடு, பச்சை மிளகாய், இஞ்சி, சிறிது சீரகம், மல்லித் தழை ஆகியவற்றை அரைத்து சேர்த்து, போதுமான உப்பு போட்டு கடும் வெயில் நேரத்தில் குடித்தால் வயிற்றுக்கு இதமாக இருக்கும். உடலுக்கும் குளிர்ச்சி தரும். உடலின் நீர்ச்சத்தும் குறையாது.

2. நெல்லி மோர்: நெல்லிக்காய்களைக் கொட்டை நீக்கி விட்டு துண்டாக்கவும். இதில் ஒரு கப் தயிர், ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சிச்சாறு, கால் டீஸ்பூன் மிளகுத்தூள், அரை டம்ளர் தண்ணீர், போதுமான உப்பு சேர்த்து மிக்சியில் நுரை பொங்க அடித்தால் நெல்லி மோர் தயார். இது உடலுக்கு சக்தியும் ஆரோக்கியமும் தரும் நீர்ச்சத்து மோர் ஆகும்.

3. வெஜிடபிள் மோர்: சிறிய கேரட் ஒன்று, வெள்ளரிக்காய் ஒன்று எடுத்து, தோல் சீவிக் கழுவி, துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். சிறு துண்டு இஞ்சியை சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும். மூன்றையும் மிக்ஸியில் அரைத்து, இந்த விழுதை ஒரு டம்ளர் மோரில் ஊற்றி, உப்பு சேர்த்துக் கலக்கவும். இதை வடிகட்டி, கொத்தமல்லித் தழை தூவி அருந்தலாம். ஆரோக்கியமும் குளிர்ச்சியும் தரும் கோடைக்கால பானம் இது. இந்த பானத்தை அருந்த உடலின் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
மனிதர்களைப் போலவே சில விலங்குகளுக்கும் வண்ணப்பார்வை குறைபாடு ஏற்படுவதன் காரணம் தெரியுமா?
நீர்ச்சத்து பானம்

4. வெள்ளரி மோர்: ஒரு சிறிய வெள்ளரிக்காயைத் தோல் சீவி, துண்டு துண்டாக வெட்டவும். இத்துடன் ஒரு பச்சை மிளகாய், நறுக்கிய கொத்தமல்லித் தழை கைப்பிடி சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதில் ஒரு கப் தயிர் ஊற்றி, உப்பு, தண்ணீர் சேர்த்து மீண்டும் அரைக்கவும். இதை வடிகட்டிக் குடித்தால், வெயில் கால உபாதைகள் தணியும். உடலின் நீர்ச்சத்தும் குறையாமல் காக்கும்.

5. வெல்ல மோர்: வெல்லப் பொடி அரைகப், இஞ்சி ஒரு துண்டு, சுக்குப்பொடி ஒரு சிட்டிகை, ஒரு ஏலக்காய், புதினா இலை ஒரு கைப்பிடி என எடுத்து, எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு அரைக்கவும். இதில் இரண்டு கப் தயிர், அளவான உப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சைச் சாறு, போதுமான தண்ணீர் கலந்து மீண்டும் ஒரு சுற்றுச் சுற்றி எடுக்கவும். குழந்தைகள் இதை ரசித்துக் குடிப்பார்கள். இந்த பானத்தை அருந்துவதால் உடலின் நீர்ச்சத்து குறையாமல் காக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com