வாத நோய்களைப் போக்கும் சக்தி வாய்ந்த மூலிகை பழம்!

வில்வ பழ சாறு
வில்வ பழ சாறுhttps://tamil.abplive.com
Published on

க்தி மிகுந்த 50 மூலிகைகளில் ஒன்று வில்வம். 21 வில்வ இலைகள் எடுத்து சாறாகவோ அல்லது அரைத்த விழுதாகவோ காலை உணவுக்கு முன் சாப்பிட்டு வர, ஆரம்பகட்ட புற்றுநோய் குணமாகும். வயிற்றுப் போக்கு, வயிறு சம்பந்தமான நோய்களைக் கூட வில்வ இலை சரிசெய்யும். இதன் பழம் வயிற்று வலியை சரியாக்கும்.

வில்வ பழத்தில் ரிபோஃப்ளேவின், பீட்டா கரோட்டின், புரதம் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும், இதில் வைட்டமின் பி1 மற்றும் பி2, தயாமின், நியாசின், கரோட்டின் போன்றவையும் நிறைந்து காணப்படுகின்றன. இது தவிர, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்துக்கள் மற்றும் நல்ல அளவிலான தாதுக்களும் நிறைந்துள்ளன. கூடுதலாக, இதில் நல்ல கொழுப்புகளும் காணப்படுகின்றன. வில்வ மரப் பட்டை சூரணம் ஒரு தேக்கரண்டி வெந்நீரில் போட்டு கஷாயம் தயாரித்து காலை, இரவு உணவுக்கு முன் சாப்பிட வாத நோய்கள், மூட்டு வலி, சவ்வு விலகல், இடுப்பு வலி, கழுத்து வலி போன்றவை சரியாகும்.

கொழுந்து வில்வ இலைகள் பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் பிரச்னைக்குத் தீர்வு தருகிறது. பெண்கள் தங்களது மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை தினமும் காலையில் குளித்த பிறகு ஒரு சுண்டைக்காய் அளவிலான வில்வக் கொழுந்தை எடுத்து அரைத்து பாலில் கலந்து குடிக்கலாம். இது மாதந்தோறும் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

உணவு சரியாக செரிமானமாகாமல் சிலருக்கு மலச்சிக்கல் பிரச்னை ஏற்படலாம். இதற்கு நிவாரணம் அளிக்கும் விதமாக வில்வ பழத்தின் ஓடு மற்றும் விதையை நீக்கி விட்டு சதைப் பகுதியை மட்டும் எடுத்து இதில் பால், சர்க்கரை போன்றவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸியில் அரைத்து சர்பத் தயார் செய்து எடுத்துக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
உங்களது பேச்சும் தகுதியுமே உங்கள் குழந்தைக்கு முன்மாதிரி!
வில்வ பழ சாறு

காது நோய்களுக்கு வில்வ இலையை நல்லெண்ணெயில் காய்ச்சி காதில் விடலாம். மேலும், வில்வ பழத்தின் பாகு தயாரித்து தினந்தோறும் தண்ணீரில் ஓரிரு டீஸ்பூன் கலந்து அருந்தலாம். வில்வ இலைகளை வதக்கி வீக்கமுள்ள இடத்தில் கட்டினால் வீக்கம் மற்றும் வலி குறையும். வில்வ பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகமாக நிறைந்துள்ளது. இது மாரடைப்பு ஏற்படாமல் இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க உதவுகிறது.

உளவியல் ரீதியாக அதிலும் முக்கியமாக மன அழுத்தம் தொடர்பான பிரச்னைகளுக்கு வில்வம் ஒரு தலைசிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. வில்வ இலையை நன்கு கொதிக்க வைத்து கஷாயமாக செய்து சாப்பிடுவது மன அழுத்தத்தைப் படிப்படியாகக் குறைக்க உதவுகிறது. கடந்த கால சம்பவங்களையே நினைத்து நினைத்து வேதனையில் மூழ்கியிருப்பவர்களுக்கு வில்வ பழம் அருமருந்து எனலாம். தினமும் இரண்டு கிராம் கஷாயமிட்டு குடிக்க நல்ல பலன் கிடைக்கும்.

வயிறு சம்பந்தமான பிரச்னைகளுக்கு வில்வ இலைகள் சிறந்த தேர்வாகும். வில்வ பழத்தோடு பனங்கற்கண்டு சேர்த்து சாறாக அருந்தி வருவது வயிற்றுப் பிரச்னைகளை எளிதில் தீர்க்க உதவுகிறது. வில்வம் பழத்தை நம் உடலில் தேய்த்து குளித்து வந்தால் உடலில் உள்ள சூடு தணியும். கண் வலி,எரிச்சல், அழற்சி, கண் சிவந்து போகுதல், சூரிய வெளிச்சத்தை பார்க்க முடியாமை, கண்ணில் நீர் வடிதல், மெட்ராஸ் ஐ எனும் கண் வலி  குணம் பெற வில்வ இலைகளை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து கண் இமைகளின் மீது பூச நல்ல பலன் கிடைக்கும். நாட்டு மருந்துக் கடைகளில் உலர வைத்து விற்கப்படும் வில்வம் பழத்தை வாங்கி 5 கிராம்  அளவில் ஒரு துண்டை எடுத்து கஷாயம் போட்டு காலை, மாலை இரண்டு வேளைகள் குடித்தால் பேதி, சீதபேதி குணமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com