அனைவர் வீட்டிலும் இருக்க வேண்டிய பொடி, வெந்நீரில் சாப்பிட்டால் போதும் நோய் ஓடிவிடும்!

அஷ்ட சூரணம்
அஷ்ட சூரணம்
Published on

இன்றைய காலகட்டத்தில் நாம் எதற்கெடுத்தாலும் மருத்துவமனைக்கு ஓடுகிறோம். ஆனால், நம் பாட்டி காலத்தில் சமையலறையே ஒரு மருத்துவமனையாக இருந்தது. ஆம், அன்றைய காலகட்டத்தில் அனைவர் வீட்டிலும் கட்டாயம் இருக்கக்கூடிய ஒரு பொடி தான் "அஷ்ட சூரணம்". "அஷ்டம்" என்றால் எட்டு என்று பொருள். 

எட்டு வகையான மருத்துவ குணங்கள் கொண்ட பொருட்களை வைத்துச் செய்யப்படும் இந்த சூரணம், செரிமானக் கோளாறுகளுக்கு ஒரு வரப்பிரசாதம். இது காலப்போக்கில் மறக்கப்பட்டுவிட்ட ஒரு மருத்துவ முறையாகிவிட்டது. இதை மீண்டும் நம் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதன் அவசியத்தை காண்போம்.

தேவையான பொருட்கள்:

  1. சுக்கு : 50 கிராம்

  2. மிளகு : 50 கிராம்

  3. திப்பிலி : 50 கிராம்

  4. சீரகம் : 100 கிராம்

  5. ஓமம் : 50 கிராம்

  6. பெருங்காயம் : சிறிதளவு 

  7. இந்துப்பு : தேவையான அளவு

  8. கறிவேப்பிலை : ஒரு கைப்பிடி அளவு

செய்முறை:

இந்த சூரணத்தை செய்வதற்கு இரும்பு வாணலிதான் சிறந்தது. இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், மற்ற பொருட்களை ஒரு பங்கு எடுத்தால், சீரகத்தை மட்டும் இரண்டு பங்காக எடுத்துக்கொள்ள வேண்டும். பெருங்காயத்தை மட்டும் நெய்யில் பொரித்துவிட்டு, மற்றவற்றை ஒவ்வொரு பொருளாக போட்டு எண்ணெய் விடாமல் வெறும் வாணலியில், தீயவிடாமல் பதமாக வறுக்க வேண்டும். மிளகு 'படபட'வென வெடிக்கும் போது எடுத்துவிட வேண்டும். ஆறிய பிறகு நைஸாக பொடி செய்து வைத்துக்கொள்ளலாம். 

இதையும் படியுங்கள்:
பறவைகளின் எண்ணிக்கை குறைவது ஏன்?
அஷ்ட சூரணம்

நமக்கு ஏன் இது தேவை? 

இன்றைய உணவு பழக்கவழக்கத்தில், நமக்கு நேரங்கெட்ட நேரத்தில் சாப்பிடுவது வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக விசேஷ வீடுகள் மற்றும் திருமணங்களில், வகை வகையான உணவுகளைக் கண்டு, வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு அவதிப்படுபவர்கள் பலர். அந்த மாதிரி நேரங்களில், இந்த அஷ்ட சூரணம் வயிற்றுக்கு ஒரு இதமான மருந்தாக இருக்கும். வாயுத் தொல்லை, அஜீரணம், மற்றும் பசி எடுக்காமல் இருப்பவர்களுக்கு இது மிகச்சிறந்த தீர்வு.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது ஒரு அருமருந்து. காலை 11 மணி அளவில், நீர் மோரில் ஒரு ஸ்பூன் அஷ்ட சூரணத்தைக் கலந்து குடித்து வந்தால், செரிமான மண்டலம் சீராகும் என்று ஆடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு கருஞ்சீரகம் கலந்த இந்த பொடி மிகவும் நல்லது.

சாப்பிடும் முறை!

இதை எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். சூடான சாதத்தில் நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு, இந்த பொடியைப் பிசைந்து சாப்பிடலாம். வெந்நீரில் கலந்தும் குடிக்கலாம். ஏன், நம் பாட்டிகள் காலத்தில் சிலர் காபியில் கூட இதைத் தொட்டுக்கொண்டு சாப்பிடுவார்களாம். அந்த அளவிற்கு இது நம் அன்றாட உணவோடு கலந்திருந்தது.

இதையும் படியுங்கள்:
'வெறித்தனமான கட்டாய கோளாறு' எனப்படும் OCD!
அஷ்ட சூரணம்

அஜீரணக் கோளாறு உள்ளவர்கள், அல்சர் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் மட்டும் மருத்துவரின் ஆலோசனைப்படி இதை எடுத்துக்கொள்வது நல்லது. மற்றபடி, அனைவர் வீட்டிலும் இருக்க வேண்டிய ஒரு அத்தியாவசியமான "ஃபேமிலி டாக்டர்" இந்த அஷ்ட சூரணம்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com