வெறும் வயிற்றில் பெருங்காயம் நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? 

Benefits of drinking Asafetida water on an empty stomach!
Benefits of drinking Asafetida water on an empty stomach!
Published on

பெருங்காயம் அதன் மருத்துவ குணங்களுக்கு பெயர் பெற்ற முக்கிய மூலிகையாகும். அதன் தனித்துவமான வாசனை மற்றும் சுவை காரணமாக இந்த மூலிகை இந்திய சமையலில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால், பெருங்காயத்தின் பயன்பாடு சமையலுக்கு மட்டுமல்ல, இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. குறிப்பாக, வெறும் வயிற்றில் பெருங்காய நீரை குடிப்பது பல நோய்களைத் தடுத்து ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இந்தப் பதிவில் வெறும் வயிற்றில் பெருங்காய நீர் குடிப்பதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். 

பெருங்காயம், அல்லிம் சட்டைவம் என்ற தாவரத்தின் வேரிலிருந்து பெறப்படும் ஒரு இயற்கை பிசின்.‌ இதில் சல்பர் சேர்மங்கள், கனிம உப்புகள் மற்றும் பிற பயனுள்ள சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே பெருங்காயம் உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கிறது. 

வெறும் வயிற்றில் பெருங்காயம் நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்: 

பெருங்காயம் செரிமான நொதிகளை அதிகரித்து செரிமானத்தை எளிதாக்குகிறது. இது வயிற்றுப்புண், வயிற்று வலி, வாயு, அஜீரணம் போன்ற செரிமானப் பிரச்சனைகளை சரி செய்ய உதவும்.

பெருங்காயத்தின் செரிமான எதிர்ப்பு பண்புகள் மூட்டு வீக்கம், வாதம் போன்ற வீக்கம் தொடர்பான பிரச்சனைகளைக் குறைக்க உதவும். மேலும், பெருங்காயம் ரத்தத்தை சுத்திகரித்து உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. இது சரும பிரச்சனைகள் முடி கொட்டும் பிரச்சனை போன்றவற்றை சரி செய்ய உதவும். 

பெருங்காய நீர் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, நோய் தொற்றுக்களில் இருந்து பாதுகாப்புடன் இருக்கலாம். இதில் உள்ள கனிம உப்புகள் எலும்புகளை வலுப்படுத்தி, எலும்பு முறிவிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன. 

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் பண்புகள் பெருங்காயத்திற்கு உண்டு. இதனால், இதய நோய்கள் வரும் அபாயம் குறைகிறது. இது நம் செரிமானத்தை மேம்படுத்தி உடல் எடையைக் குறைக்க உதவும். மேலும், மன அழுத்தத்தைக் குறைத்து நல்ல தூக்கத்தை பெறுவதற்கு பெருங்காயம் உதவுகிறது. 

இதையும் படியுங்கள்:
தினமும் சிட்டிகை சேர்த்தால் போதும்... பலன்கள் பல தரும் பலே பெருங்காயம்!
Benefits of drinking Asafetida water on an empty stomach!

எச்சரிக்கை:  

பெருங்காயம் சிலருக்கு ஒவாமையை ஏற்படுத்தும். எனவே, முதன்முறையாக பெருங்காயத்தை பயன்படுத்துபவர்கள் மிகக் குறைவாகவே பயன்படுத்திப் பார்க்க வேண்டும். கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பெருங்காயத்தை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். எந்த ஒரு மூலிகையை நீங்கள் புதிதாக பயன்படுத்துவதற்கு முன்பும், மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது. இவ்வாறு நீங்கள் உங்களது உணவில் பெருங்காயத்தை சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மகிழ்ச்சியாக வாழ முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com