ஜலதோஷம் பிடித்து விட்டால் மூக்கை மென்மையாக சிந்துங்கள்… ஜாக்கிரதை!

Cold
Cold
கிரி கணபதி

வணக்கம், என் பெயர் கிரி கணபதி. என்னைப் பற்றி அறிய ஆர்வம் காட்டியமைக்கு நன்றி! கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக Content Creation துறையில் இருக்கிறேன். Writing, Video Content, Podcast போன்றவற்றில் அனுபவம் உண்டு. உள்ளடக்க ஆராய்ச்சி மற்றும் AI கருவிகளைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றுள்ளேன். ஆரோக்கியம், மோட்டிவேஷன், டெக்னாலஜி, சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம். டிஜிட்டல் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் நான், நிலையான வசீகரிக்கும் உள்ளடக்கங்கள் மூலமாக வாசகர்களையும், பார்வையாளர்களையும் கவர முடியும் என முழுமையாக நம்புகிறேன்.

Updated on

ஜலதோஷம் பிடித்துவிட்டால் மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல் போன்றவை ஏற்படுவது சகஜம். சளித் தொல்லையில் இருந்து விடுபட மூக்கை பலமாக சிந்துவதுதான் உடனடி நிவாரணம் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் உண்மையில் அது சரியா? பலரும் அறியாத உண்மை என்னவென்றால், மூக்கை வேகமாக சிந்துவது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். 

பலமாக மூக்கை சிந்துவது, மூக்கின் மென்மையான உள் தோலில் எரிச்சலை உண்டாக்கி வீக்கத்தை ஏற்படுத்தும். அது மட்டுமின்றி, நாம் வேகமாக மூக்கை சிந்தி வெளியேற்றும் சளியானது, காற்றோடு சேர்ந்து சைனஸ் குழிக்குள் சென்று தொற்றை அதிகமாக்கும் அபாயம் உள்ளது. மூக்கை பலமாக சிந்தி வெளியேற்றும்போது ஏற்படும் அதிக அழுத்தம், யூஸ்டாசியன் குழாய் வழியாக சளியை காதுக்கு கொண்டு செல்ல வழி வகுக்கும். இது காது தொற்றுக்கு முக்கிய 

அப்படியானால் மூக்கை சிந்துவது எப்படி எனக் கேட்கிறீர்களா? மூக்கை சுத்தப்படுத்த வேண்டும் தான், அதே சமயம் ஆபத்தும் வரக்கூடாது என்றால் என்ன செய்வது? நிபுணர்கள் இதற்கும் ஒரு சிறந்த தீர்வு சொல்கிறார்கள். மூக்கை மென்மையாக சிந்துவதே பாதுகாப்பானது. ஒரு நாசியை விரலால் மூடிக்கொண்டு, மறு நாசியை மெதுவாக சிந்துங்கள்.

இதையும் படியுங்கள்:
உலர் பழங்களை பாலில் ஊறவைப்பதா? தண்ணீரில் ஊறவைப்பதா? எது அதிக ஆரோக்கியம்?
Cold

அதிக அழுத்தம் கொடுக்காமல் சளியை வெளியேற்ற வேண்டும். மூக்கு அடைப்பு அதிகமாக இருந்தால், முதலில் உப்பு நீர் கரைசலை மூக்கில் தெளித்து அல்லது ஆவி பிடித்து சளியை தளர்த்தலாம். பிறகு மென்மையாக மூக்கை சிந்தலாம். மூக்கை துடைக்க மென்மையான டிஷ்யூக்களை பயன்படுத்துவது நல்லது. கற்றாழை கலந்த டிஷ்யூ பேப்பர்கள் மூக்கைச் சுற்றி ஏற்படும் எரிச்சலை குறைக்க உதவும்.

மூக்கை சிந்துவதற்கு மாற்றாக வேறு வழிகளும் உள்ளன. உப்பு நீர் கொண்டு மூக்கை கழுவுவது சளி, பாக்டீரியா போன்றவற்றை வெளியேற்ற உதவும். மூக்கடைப்பிலிருந்து நிவாரணம் கிடைக்கும். மூக்கடைப்பு நீக்கிகள் தற்காலிகமாக மூக்கின் பாதையில் உள்ள வீக்கத்தை குறைத்து சுவாசத்தை எளிதாக்கும். ஆனால் இவற்றை அடிக்கடி உபயோகிக்க கூடாது. சூடான நீரில் நனைத்த துணியை கொண்டு ஒத்தடம் கொடுப்பதும், நீராவி பிடிப்பதும் சளியை தளர்த்தி, மூக்கை சிந்தாமலேயே சளியை வெளியேற்ற உதவும்.

இதையும் படியுங்கள்:
ஜலதோஷம், தலைவலிக்கு கைக்கண்ட நிவாரணியாகும் நொச்சி இலை!
Cold

எனவே, ஜலதோஷம் பிடிக்கும்போது மூக்கை வேகமாக சிந்துவதை தவிர்த்து, மென்மையான முறையை பின்பற்றுவது அல்லது மாற்று வழிகளை முயற்சிப்பது நல்லது.

logo
Kalki Online
kalkionline.com