Do you know which powerful vegitable scored 100 out of 100 in the study?
Do you know which powerful vegitable scored 100 out of 100 in the study?https://www.hindutamil.in

ஆய்வில் 100க்கு 100 மதிப்பெண் பெற்ற ஆற்றல்மிக்க காய் எது தெரியுமா?

லகின் பல்வேறு உணவுப் பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்தி அவற்றிலுள்ள பண்புகளை கணக்கில் எடுத்துக்கொண்டு அது உடலுக்கு எந்தளவு நன்மைகள் செய்கிறது என்பதை 100க்கு எத்தனை சதவிகிதம் என்று ஆய்வு செய்து மதிப்பெண்களை வழங்கியுள்ளார்கள் அமெரிக்க யேல் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.

ஓவரால் நியூட்ரிசனல் குவாலிட்டி இன்டெக்ஸ் என்ற அந்தப் பட்டியலில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற காய்கறிகள் மூன்று. ஒன்று எல்லா காலங்களிலும் கிடைக்கும் ஓக்ரா எனும் நம் ஊர் வெண்டைக்காய். மற்றொன்று புரோக்கோலி, அடுத்தது பச்சை பட்டாணி.

வெண்டைக்காய் சர்க்கரை, அனீமியா, ஆஸ்துமா, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், வயிற்றுப் புண், புற்றுநோய் மற்றும் கண் பார்வை குறைபாடு என சகல நோய்களையும் தீர்க்கும் சர்வரோக நிவாரணி. இதிலுள்ள வைட்டமின் ஏ யும், பீட்டா கரோட்டினும் இணைந்து கண் பார்வையை கூர்மைப்படுத்துவதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். பச்சையாக ஒரு வெண்டைக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும், ஜீரண சக்தியும் அதிகரிக்கும். இதிலுள்ள ஆன்டி மைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதற்கு உதவுகின்றன.

வெண்டைக்காய் ஒன்றை உப்பு கலந்த நீரில் கழுவி சுத்தம் செய்து விட்டு, அதன் இரு புறங்களிலும் சிறிதளவு வெட்டிய பிறகு அதை இரண்டாக கீறி இரவில் ஒரு டம்ளர் நீரில் ஊறப்போட்டு விட்டு, காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும், இரத்த சர்க்கரை அளவு குறையும், ஆஸ்துமாவின் தீவிரம் குறையும், சளி மற்றும் இருமல் தீவிரம் குறையும், சிறுநீர் கடுப்பு குறையும், பெண்களின் வெள்ளைப்படுதல் பிரச்னை சரியாகும் என்கிறார்கள்.

வெண்டைக்காயில் அடங்கியுள்ள நீர்ச்சத்து உடல் திரவ இழப்பை தடுத்து, உடலை குளிர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. எனவே, இது கோடை காலத்திற்கு ஏற்ற குளிர்ச்சியான காய். மேலும், இதிலுள்ள, ‘பெக்டின்' என்ற நார்ச்சத்து உடலிலுள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றுகிறது. குடலையும் சுத்தப்படுத்துகிறது.

வெண்டைக்காயில் உயர் தரமான பாஸ்பரஸ் சத்து உள்ளது. எனவே, மூளை வளர்ச்சிக்கு உதவும் காய்கறிகளில் வெண்டைக்காய் முதலிடம் வகிக்கிறது. வெண்டைக்காயை நறுக்கும்போது வெளியே வரும் பிசுபிசுப்பான திரவம்தான் மூளைக்கு புத்துணர்வு தரும் ஆற்றல் உடையது. எனவே, வளரும் குழந்தைகளுக்கு அடிக்கடி வெண்டைக்காயை உணவில் சேருங்கள். அது பிடிக்காத குழந்தைகளுக்கு வெண்டைக்காய் விதைகளை வெயிலில் காயவைத்து பொடியாக்கி பாலில் கலந்து கொடுங்கள்.

வெண்டைக்காயில் அடங்கியுள்ள பச்சையம் ஜலதோஷத்தால் குளோரோபில் சத்தும் வைட்டமின் கே மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் எலும்பு மற்றும் தசைகள் பலம் காக்க உதவுகிறது. முதுகு வலி மற்றும் மூட்டு வலி தீர்க்கவும், எலும்புகளின் பலத்திற்கும் வெண்டைக்காயை இந்து உப்பும், நெய்யும் சேர்த்து வேக வைத்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

பிஞ்சு வெண்டைக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வர, மார்பக, கர்ப்பப்பை வாய் புற்றுநோய், கணையம், நுரையீரல் புற்றுநோய் வருவதை தவிர்க்கலாம் என்கிறது அமெரிக்க வேளாண்மை துறை ஆ ய்வு. காரணம், அதிலுள்ள லெக்டின் எனும் புரதம், அமினோ அமிலங்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள். அதேபோல் சுவாசக் கோளாறுகள் மற்றும் பல்நோப்களை உருவாக்கும் கிராம் பாசிடிவ் பாக்டீரியாக்களையும் கட்டுப்பாட்டில் வைக்கும் என்கிறார்கள்.

முற்றிய வெண்டைக்காயின் விதைகளை தனியாக எடுத்து வெந்நீரில் வேக வைத்து டீ க்கு பதிலாக குடித்தால் அதிக சக்தி கிடைக்கும். வயதான காலத்தில் ஏற்படும் ஞாபக மறதியை தடுக்கும் ஆற்றல் கிடைக்கும். உடலிலுள்ள செல்கள் ஒருங்கிணைக்கும் ஆற்றல் மிக்கது வெண்டைக்காய்.

இதையும் படியுங்கள்:
உங்கள் குழந்தைகள் அதிகமாக மொபைல் பார்க்கிறார்களா? உஷார் பெற்றோர்களே!
Do you know which powerful vegitable scored 100 out of 100 in the study?

பெண்கள் வெண்டைக்காய் சாற்றை தொடர்ந்து முகத்தில் பூசி காய்ந்த பிறகு கழுவி வர கரும்புள்ளிகள் மறைந்துவிடும். சருமம் அதிக பொலிவு பெறும். வெண்டைக்காய் வேக வைத்த தண்ணீர் ஊற்றி குளித்து வந்தால் கூந்தல் உதிர்வை தடுக்கலாம். கர்ப்பிணி பெண்களுக்கும், பாலூட்டும் பெண்களுக்கும் வெண்டைக்காய் நல்லது. காரணம் அதிலுள்ள ஃபோலிக் அமிலம்.

நமது உடலில் ஹோமோ சைஸ்டீன் எனும் அமினோ அமிலத்தின் அளவு எப்போதும் குறைந்த அளவே இருக்க வேண்டும். இது அதிகமாகும்போது இரத்தக்கட்டிகளை உருவாக்கி இதய நோய்களை உருவாக்கும். குறைந்த ஹோமோ சைஸ்டீன் அளவை பராமரிக்க வெண்டைக்காய் உதவுகிறது என்கிறார்கள்.

வெண்டைக்காயை பறித்த அன்றே சாப்பிடுவதுதான் நல்லது. அடுத்த நாள் என்றால் அது முற்றிவிடும். அதேவேளை பிஞ்சுக்களாக சாப்பிடுவது மிகவும் நல்லது. காரணம் அப்போது தான் அதிலுள்ள பெக்டின் மற்றும் பசை தன்மை உடலில் பித்த நீர் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும். உணவு செரிமானத்திற்கு பின் அவை கரையா நார்ச்சத்தாக மாறி குடலை பாதுகாக்கும், மலக்குடல் புற்றுநோயை தடுக்கும் என்கிறார்கள்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com