வேர்க்கடலை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்காதீங்க மக்களே!

வேர்க்கடலை.
வேர்க்கடலை.
Published on

வேர்க்கடலை, ஒரு சுவையான மற்றும் சத்தான உணவு. புரதம், நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள் என பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை தன்னகத்தே கொண்ட வேர்க்கடலை, நமது அன்றாட உணவில் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்கிறது. 

இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, இரத்த உறைவுகளைக் குறைப்பது, எடை கட்டுப்பாடு என இதன் நன்மைகள் ஏராளம். ஆனால், வேர்க்கடலை உண்ட பின் உடனடியாகத் தண்ணீர் அருந்துவது குறித்த சில கருத்து வேறுபாடுகள் மக்களிடையே நிலவுகின்றன. இது குறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

வேர்க்கடலையில் இயற்கையாகவே எண்ணெய் மற்றும் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளது. பொதுவாக, எண்ணெய் மிகுந்த உணவுகளை உண்ட பிறகு உடனடியாகத் தண்ணீர் குடிப்பது சில அசௌகரியங்களை ஏற்படுத்தலாம். வேர்க்கடலை சாப்பிட்டதும் தண்ணீர் அருந்தும்போது, அதில் உள்ள எண்ணெய் உணவுக்குழாயின் உட்புறத்தில் படிந்து, ஒருவித எரிச்சல் அல்லது இருமலைத் தூண்டலாம். மேலும், இத்தகைய கொழுப்புச் சத்து உணவுக்குழாயில் படிவது செரிமானப் பாதையில் சில மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது.

சிலர், வேர்க்கடலையைச் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பதால் செரிமானப் பிரச்சினைகள் வரலாம் என்று நம்புகின்றனர். உடனடி நீர் அருந்துதல், செரிமான அமிலங்களின் அடர்த்தியைக் குறைத்து, உணவு சரியாக செரிமானம் ஆகாமல் தடுக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால், வயிறு உப்புசம், வாயுத்தொல்லை, நெஞ்செரிச்சல் அல்லது மலச்சிக்கல் போன்ற அஜீரணக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

வேர்க்கடலை உடலுக்கு வெப்பத்தை உண்டாக்கும் ஒரு உணவு என்பதால், அதை உண்ட பிறகு உடனடியாக குளிர்ந்த நீர் அருந்துவது உடல் வெப்பநிலையில் திடீர் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி சளி அல்லது இருமலுக்கு வழிவகுக்கும் என்ற கருத்தும் உள்ளது.

வேர்க்கடலை ஒவ்வாமை உள்ளவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஒவ்வாமை உள்ளவர்கள் வேர்க்கடலையைத் தவறுதலாகச் சாப்பிட்டுவிட்டு, அதற்குப் பிறகு தண்ணீர் அருந்தும்போது, சுவாசிப்பதில் சிரமம் போன்ற ஒவ்வாமை அறிகுறிகள் தீவிரமடையலாம். 

இதையும் படியுங்கள்:
தித்திக்கும் சுவையில் பாம்பே அல்வா - வேர்க்கடலை லட்டு ரெசிபிஸ்!
வேர்க்கடலை.

எனவே, வேர்க்கடலையை உண்டு முடித்த பிறகு சற்று நேரம் பொறுத்து, பிறகு தண்ணீர் அருந்துவதே பாதுகாப்பானது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இது, செரிமான மண்டலத்திற்கு உணவைச் செயலாக்கப் போதுமான அவகாசத்தைக் கொடுக்கும்.

(முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும், பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை அணுகவும்.)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com