மூட்டு வலியை பறக்கவிட எளிய எருக்கன் இலை வைத்தியம்!

பக்கவிளைவுகள் இல்லாத இயற்கையான முறையில் மூட்டு வலியை வீட்டிலேயே குணப்படுத்துவது எப்படி?
Joint pain | மூட்டு வலி
Joint pain | மூட்டு வலி
Updated on

சித்த மருத்துவர் நந்தினி சுப்ரமணியம் (Sri Sesha Sai Herbal Clinic) அவர்கள், இப்பதிவில், கால் மற்றும் மூட்டு வலியைப் போக்க வீட்டிலேயே எளிமையாகச் செய்யக்கூடிய ஒரு அற்புதமான இயற்கை மருத்துவ குறிப்பைப் பகிர்ந்துள்ளார்.

நமது முன்னோர்கள் பின்பற்றிய பாரம்பரிய மருத்துவ முறைகளில், இயற்கையாகக் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு எப்படிப்பட்ட மூட்டு வலிகளையும் எளிதில் சரிசெய்ய முடியும் என்பதை இந்தப் பதிவில் விளக்குகிறார்:

Joint pain | மூட்டு வலி
Joint pain | மூட்டு வலி

குறிப்பாக, இன்றைய காலத்தில் வயதானவர்கள் முதல் இளையவர்கள் வரை பலரையும் அவதிக்குள்ளாக்கும் கால் வலி, மூட்டு வலி மற்றும் இடுப்பு வலியைப் போக்க 'எருக்கன் இலை' எப்படிக் பயன்படுகிறது என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

நமது அன்றாட வாழ்வில் மூட்டு வலி அல்லது முட்டி வலி வந்துவிட்டால், அன்றாட வேலைகளைக் கூடச் செய்ய முடியாத அளவுக்கு அவதிப்படுவோம். இதற்காக எத்தனையோ தைலங்களையும், மருந்து மாத்திரைகளையும் தேடி அலைகிறோம். ஆனால், நம் வீடுகளுக்கு அருகிலேயே எளிதில் கிடைக்கக்கூடிய எருக்கன் இலையை வைத்து இந்த வலிகளுக்கு ஒரு அருமையான ஒத்தடம் கொடுக்க முடியும்.

 Joint pain | மூட்டு வலி
Erukkan Plant | Calotropis gigantea

இதற்கு முதலில் 15 முதல் 20 எருக்கன் இலைகளைச் சேகரித்துக் கொள்ள வேண்டும். அந்த இலைகளை ஒன்றை மேல் ஒன்றாக அடுக்கி, பின்னர் அவற்றை நன்றாகச் சுருட்டி ஒரு கயிற்றைக் கொண்டு இறுக்கமாகக் கட்டிக் கொள்ள வேண்டும். இப்படிச் சுருட்டிக் கட்டிய இலையின் ஒரு பக்கத்தைக் கத்தரிக்கோலால் வெட்டும்போது, வட்ட வடிவில் அடுக்கப்பட்ட அந்த எருக்கன் இலையிலிருந்து பால் வெளிவருவதைக் காணலாம்.

இப்போது ஒரு இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்து நன்றாகச் சூடாக்க வேண்டும். நாம் கட்டி வைத்திருக்கும் எருக்கன் இலைச் சுருளின் பால் வடியும் பகுதியை, அந்தச் சூடான இரும்புச் சட்டியின் மீது வைக்க வேண்டும். அந்தச் சுருட்டைப் பிடித்து ஒத்தடம் கொடுப்பதற்கு மிக எளிதாக இருக்கும் வகையில் கையில் பிடித்துக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும் ஜோதிஷ்மதி பொடியின் வியக்கத்தக்க மருத்துவ குணங்கள்!
Joint pain | மூட்டு வலி

இப்போது லேசான சூட்டில் இருக்கும் அந்த எருக்கன் இலைச் சுருளை எடுத்து, கால் வலி அல்லது மூட்டு வலி உள்ள இடங்களில் மெதுவாக ஒத்தடம் கொடுத்து வர வேண்டும். அந்தச் சூட்டுடன் எருக்கன் இலைப்பால் நமது தோலின் மீது படும் போது, அங்கே இருக்கும் வீக்கம் உடனடியாகக் குறையத் தொடங்கும். சிலருக்கு முட்டிப் பகுதியில் நீர் கோத்துக் கொண்டு தாங்க முடியாத வலி இருக்கும். இந்த முறையைப் பயன்படுத்தி ஒத்தடம் கொடுத்து வந்தால், முட்டியில் உள்ள நீர்க்கோவை முழுமையாகச் சரியாகும். நீர்கோவை நீங்கியதுமே வலியும் படிப்படியாகக் குறைய ஆரம்பித்துவிடும்.

இதையும் படியுங்கள்:
30 வயதுக்கு மேல் ஞாபக சக்தி குறைகிறதா? நினைவாற்றலை பலப்படுத்த சூப்பர் டிப்ஸ்!
Joint pain | மூட்டு வலி

ரசாயனங்கள் கலந்த வலி நிவாரணிகளைத் தேடிச் செல்வதை விட, இயற்கையான முறையில் நம் பாரம்பரிய மருத்துவத்தைப் பின்பற்றி மூட்டு வலியைப் போக்க இந்த எருக்கன் இலை ஒத்தடம் ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது.

logo
Kalki Online
kalkionline.com