4 நாட்களில் வயிற்று எரிச்சலை விரட்டியடிக்கும் வாழை வேர் கஷாயம்!

Banana tree root
Banana tree root
Published on

வாழை மரம் என்பது அதன் பூ, காய், பழம், இலை, தண்டு என அத்தனை பாகங்களும் பயன்தரக்கூடிய ஒரு அற்புத மரம். ஆனால், வாழை மரத்தின் அடிப்பகுதி அல்லது வேர்ப்பகுதி (Rhizome ) குறித்து பலருக்கும் தெரியாது. சமையலுக்காகத் தண்டைப் பயன்படுத்தும்போது, அடிப்பகுதியில் உள்ள கெட்டியான, சற்றுக் கசப்புச் சுவையுள்ள இந்த வேர்ப்பகுதியை நாம் பெரும்பாலும் வீசி விடுகிறோம். ஆனால், நமது பாரம்பரிய மருத்துவத்தில், இந்த வேர்ப்பகுதி பல அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.

வாழை மரத்தின் வேர்ப்பகுதி சிறுநீரகத்தை சுத்தப்படுத்த உதவுகிறது. மேலும், இது இரைப்பை மற்றும் குடலில் ஏற்படும் வீக்கம், எரிச்சல் மற்றும் அசிடிட்டி போன்றவற்றைத் தணித்து, வயிற்றைக் குளிரச் செய்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு, வாழை வேர் சாறு உடலில் சர்க்கரையை உறிஞ்சும் வேகத்தைக் குறைத்து, இரத்த சர்க்கரை அளவை சட்டென்று அதிகரிக்காமல் கட்டுப்படுத்த உதவுகிறது.

அத்துடன், ஒட்டுமொத்த நரம்பு மண்டல ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கிறது. பாரம்பரியமாக, இந்த வேர்ப்பகுதி கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்தி, நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது என்று நம்பப்படுகிறது. இது பார்வைத் திறனை மேம்படுத்தவும் கண்களைப் பாதுகாக்கவும் உதவுகிறது.

இத்தனை நன்மைகளை தரும் இந்த வேரை எப்படி எடுத்துக்கொள்வது என்று பார்ப்போமா?

வாழை வேர் கஷாயமாக எடுத்துக்கொள்ளலாம்.

இது சாதாரணமாக 'வாழைத் தண்டு சாறு' போலத்தான் தயாரிக்கப்படுகிறது.

தேவையான பொருட்கள்:

  • வாழை வேர்ப்பகுதி (தோல் நீக்கியது) - ஒரு கைப்பிடி அளவு

  • சீரகம் - 1 டீஸ்பூன்

  • மிளகு - 1/2 டீஸ்பூன் (அல்லது 5-6 முழு மிளகு)

  • தண்ணீர் - 2 கப்

செய்முறை:

1.  வாழை வேர்ப்பகுதியை நன்கு கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுக்கவும்.

2.  ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அதில் சீரகம், மிளகு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

3.  தண்ணீர் பாதியாகக் குறைந்தவுடன், அதை வடிகட்டி, அதில் நீங்கள் எடுத்து வைத்த வாழை வேர் சாற்றைச் சேர்த்து உடனடியாகக் குடிக்கலாம். (சாற்றைக் கொதிக்க விடக்கூடாது.)

இதையும் படியுங்கள்:
மன அழுத்தத்தைக் குறைக்கும் மாமருந்து: நேர்மறை எண்ணங்கள்!
Banana tree root

4.  சிறிது புளிப்புச் சுவைக்காக எலுமிச்சை சாறு அல்லது சுவைக்காகப் பனை வெல்லத்தைச் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்தச் சாற்றை வாரம் ஒருமுறை அல்லது இரண்டு முறை (அல்லது மருத்துவர் ஆலோசனையின்படி) சுமார் 50 மில்லி அளவுக்கு உட்கொள்வது சிறந்த பலனைத் தரும்.

வாழை வேர்ப்பகுதியை கஷாயம் அல்லது சாறாகப் எடுத்துக்கொள்வதற்கு முன்பு, கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனை கேளுங்கள்.

குறிப்பாக, நீங்கள் சர்க்கரை நோய் (நீரிழிவு) அல்லது இரத்த அழுத்தத்திற்காக மாத்திரைகள் எடுத்துக்கொள்பவராக இருந்தால், இந்த ஆலோசனையைப் பெறுவது மிகவும் அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com