லேப்டாப்பை மடியில் வைத்துப் பயன்படுத்துபவரா நீங்கள்? அச்சச்சோ ஜாக்கிரதை!

மடி மீது லேப்டாப் பயன்படுத்துபவர்
மடி மீது லேப்டாப் பயன்படுத்துபவர்
Published on

‘லேப்டாப் அதாவது மடிக்கணினி என்ற வார்த்தையிலேயே மடி என்கிற வார்த்தை உள்ளதே. அப்புறம் மடியில் வைத்துக்கொண்டு மடிக்கணினியைப் பயன்படுத்துவதில் என்ன தவறு?’ எனக் கேட்கத் தோன்றுகிறதுதானே? நிறைய இளம் வயதினர் லேப்டாப்பை மடியில் வைத்துக்கொண்டுதான் பயன்படுத்துகிறார்கள். ஆனால், அது பலவிதமான உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்கிற அறியாமையினால்தான் நிகழ்கிறது என்பது நிதர்சனம்.

லேப்டாப்பை மடியில் வைத்துப் பயன்படுத்தினால் ஏற்படும் தீமைகள்:

1. ஆரோக்கியம் & சாதனம் பாதிப்பு: மடிக்கணினியை நீண்ட நேரம் மடியில் வைத்திருப்பது பயன்படுத்துபவரின் உடல் நலத்தின் மீது பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். அதேபோல மடிக்கணினியும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று நிறையப் பேருக்கு தெரிவதில்லை.

2. வெப்ப வெளிப்பாடு: மடிக்கணினிகள் செயல்பாட்டின்போது வெப்பத்தை உருவாக்குகின்றன. அதில் இருந்து வெளியேறும் சூடான காற்று, சருமத்தில் எரிச்சலையும், தீக்காயங்களையும் ஏற்படுத்தும். இது, ‘டோஸ்டெட் ஸ்கின் சிண்ட்ரோம்’ (Toasted skin Syndrome) எனும் பாதிப்பை ஏற்படுத்தும். வறுக்கப்பட்ட சரும நோய்க்குறி என்பது மிதமான வெப்பம் அல்லது மடிக்கணினிகளில் இருந்து வெளிப்படும் அகச்சிவப்பு கதிர்வீச்சினால் தொடர்ந்து ஏற்படும் சரும ஒழுங்கின்மை ஆகும்.

3. தோரணை பிரச்னைகள்: மடியில் மடிக்கணினியைப் பயன்படுத்துவது மோசமான தோரணையை ஊக்குவிக்கிறது, குனிந்துகொண்டே வேலை செய்வதால், இது காலப்போக்கில் முதுகு, கழுத்து மற்றும் தோள்பட்டை வலிகளுக்கு வழிவகுக்கும்.

4. பணிச்சூழலியல்: மடிக்கணினிகளை மடியில் வைத்துப் பயன்படுத்த பணிச்சூழலியல் ரீதியாக அது வடிவமைக்கப்படவில்லை. இது மணிக்கட்டுகள், கைகள் மற்றும் விரல்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இது மீண்டும் மீண்டும் ஏற்படும் காயங்களுக்கு வழிவகுக்கும். மடிக்கணினிகளில் இருந்து வெளிப்படும் வெப்பம், ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.

5. சாதன காற்றோட்டம்: மென்மையான மடியின் மேற்பரப்பில் மடிக்கணினியை வைப்பது சாதனத்தின் காற்றோட்ட போர்ட்டுகளைத் தடுக்கலாம். இதனால் சாதனம் அதிக வெப்பமடையும் மற்றும் அதன் உள்கூறுகளை சேதப்படுத்தும்.

6. பேட்டரி ஆயுள்: அதிக வெப்பம் மடிக்கணினியின் பேட்டரியின் ஆயுளைக் குறைக்கலாம். இது சாதனத்தின் செயல்திறன் குறைவதற்கும் வழிவகுக்கும். பேட்டரி மாற்ற நேர்ந்தால் ஏகப்பட்ட செலவு பிடிக்கும்.

7. மின்காந்த கதிர்வீச்சு: மடிக்கணினிகள் மின்காந்த புலங்களை (EMFs) வெளியிடுகின்றன. இதன் அளவுகள் பொதுவாக குறைவாக இருந்தாலும், மடி மீது நீண்ட நேரம் வைத்திருக்கும்போது உணர்திறன் எனப்படும் சென்சிட்டிவிட்டி உள்ள நபர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.

8. கவனச்சிதறல்: மடியில் மடிக்கணினியை வைத்து வேலை செய்வது குறைவான கட்டமைக்கப்பட்ட பணிச்சூழலின் காரணமாக உற்பத்தித்திறன் மற்றும் கவனம் குறைவதற்கு வழிவகுக்கும்.

9. கசிவு அபாயம்: சிலர் ஏதேனும் நொறுக்குத்தீனி, காஃபி, அல்லது குளிர்பானம் குடித்துக்கொண்டே, மடியில் மடிக்கணினியை வைத்துப் பயன்படுத்துவார்கள். பானங்கள் மற்றும் உணவில் இருந்து தற்செயலான கசிவுகள் சாதனத்தின் மீது படும்போது அது அபாயத்தை அதிகரிக்கிறது. இது சாதனத்திற்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
காதுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க சில டிப்ஸ்! 
மடி மீது லேப்டாப் பயன்படுத்துபவர்

சில ஆலோசனைகள்:

1. ஆரோக்கியம் மற்றும் சாதனத்தின் நீண்ட ஆயுளுக்கு, சிறந்த தோரணை மற்றும் பணிச்சூழலியலை மேம்படுத்த, மடிக்கணினியை மேசை போன்ற தட்டையான, நிலையான மேற்பரப்பில் வைத்துப் பயன்படுத்தவும்.

2. மடிக்கணினி பயன்படுத்தும் நேரத்தை குறைக்கவும். நாற்பது நிமிடங்களுக்கு ஒரு முறை உடலுக்கும் சாதனத்திற்கும் ஓய்வு கொடுக்கவும்.

3. நல்ல குளிரூட்டும் அமைப்புகள் கொண்ட மடிக்கணினிகளைத் தேர்ந்தெடுக்கவும்.

4. அவசியம் மடி மீது சிறிது நேரம் மடிக்கணினியை வைத்துப் பயன்படுத்த நேர்ந்தால், மடி மீது மரத்தினால் ஆன சிறிய பலகை போன்ற ஏதாவது ஒன்றை வைத்து, அதன் மீது சாதனத்தை வைத்துப் பயன்படுத்துவது மிகவும் அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com