இயற்கை வைத்தியம் - உன்னத நலம் தரும் உத்தாமணி இலை!

Uthamani plant
Uthamani plant
Published on

வேலிப்பருத்தி என்று அழைக்கப்படும் உத்தாமணி இலைகள் சர்வ சாதாரணமாக தெருவோரங்களில் விளைந்தாலும், இதன் மருத்துவப் பலன்கள் மகத்தானது.

  • மகப்பேற்றின்போது ஏற்படும் அதிகமான இரத்தப்போக்கினைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது உத்தாமணி இலைகள்.

  • உத்தாமணி இலைகளை சாறு எடுத்து, அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால், குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.

  • உத்தாமணி இலையை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீருடன் பசும்பால் கலந்து குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும். ரத்த அழுத்தம் சீராகும்.

  • உத்தாமணி இலைச் சாற்றைச் சிறிதளவு சுண்ணாம்புடன் கலந்து கால் வீக்கங்களுக்குப் பற்றாக போடலாம். வீக்கம், வலி இரண்டும் விரைவில் குணம் பெறும்.

  • மூட்டுவலி கட்டுப்பட, உத்தாமணி இலைச்சாற்றுடன் சம அளவு எலுமிச்சம்பழச்சாறு கலந்து மேல்பூச்சாக வலி உள்ள இடத்தில் தடவ மிக விரைவில் குணம் ஆகும்.

  • பெண்களுக்கு மாதவிலக்கின் போது உண்டாகும் வயிற்று வலிக்கு வேலிபருத்தி இலைசாற்றுடன் ஓரு தேக்கரண்டி தேன் கலந்து கொடுக்க மாதவிடாய் வயிற்று வலி சரியாகும்.

  • வேலிப்பருத்தி இலைச்சாறுடன் சுக்கு, பெருங்காயம் சேர்த்து காய்ச்சி இளஞ்சூட்டில் பற்றிட வாதவலி, வீக்கம் குணமாகும். தொடக்க நிலையில் இருக்கும் யானைக்கால் நோய் இருந்தால் 48 நாட்களில் குணமாகும்.

  • சூதகவாயு, கீல்வாதம், வீக்கம், ஆஸ்துமா, தலைவலி போன்றவற்றிற்கென தயார் செய்யப்படும் மருந்துகளில் உத்தாமணியும் முக்கிய இடம் வகிக்கின்றது.

  • வயிற்றுப் புழுக்களின் ஆதிக்கத்தால், பிள்ளைகளைப் பசியின்மை வாட்டும்போது, உத்தாமணி இலைகளைக் குடிநீரில் போட்டுக் காய்ச்சி, அரைக் கரண்டியளவு கொடுக்க, புழுக்கள் வெளியேறிப் பசி அதிகரிக்கும்.

  • உத்தாமணி சாறுடன் ஊறவைத்த மிளகைப் பொடித்து, சிறிதளவு பாலில் கலந்து கொடுக்க, வாயுக் கோளாறு விலகும்.

  • சுவாசக் கோளாறுடன், வயிற்றுப் பிரச்னை, வயிற்று வலி, குளிர் காய்ச்சல், சளித் தொல்லை போன்ற பிரச்னைகளையும் இது போக்கும்.

  • இதன் இலையை பறித்து, இடித்து, சாறு பிழிந்து, தினமும், காலையில் ஒரு ஸ்பூன் குடித்து வந்தால், சுவாசப் பிரச்னை தீரும்; ஆஸ்துமா கட்டுப்படும்.

  • உத்தாமணி இலையை மையாக அரைத்து, அந்த விழுதை நகச்சுற்று பாதித்த இடங்களில் பூசி வந்தால் விரைவில் குணம் அடையும்.

  • உத்தாமணி, நொச்சி, பொடுதலை போன்ற மூலிகைகளை வதக்கிச் சாறு பிழிந்து, சிறு கரண்டி அளவு குழந்தைகளுக்குக் கொடுப்பது, நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்..

முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை அணுகவும்.

இதையும் படியுங்கள்:
வெரிகோஸ் வெயின் - சுருண்டு கொள்ளும் நரம்பு - என்ன தீர்வு?
Uthamani plant

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com