

மங்கையர் மலர் இதழில், 2019 ஆம் ஆண்டு, மன நல ஆலோசகர் விஜயலக்ஷ்மி பந்தையன் அவர்கள் 'நம் மனம் நம் கையில்’ என்ற தலைப்பில் கட்டுரைகளை தொடர்ந்து 15 வாரங்கள் எழுதினார். அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...
தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
எண்ணம் நல்ல எண்ணம் - விஜயலக்ஷ்மி பந்தையன் - மன நல ஆலோசகர் Alpha Mind Trainer
மனம் என்பது நமக்குள் இருக்கும் மிகப் பெரிய ஒரு சக்தி. அது அடிக்கடி மாறும் தன்மையுடையது. டைனமிக் எனர்ஜி என்று சொல்வார்கள். அப்படி மாறும்பொழுது சில சமயம் நமக்கே எதிரியாகவும் இந்த மனம் செயல்படுவதுண்டு.
தனலக்ஷ்மியின் அனுபவமும் அதுதான். சிறு வயதிலிருந்தே ஆரோக்கியத்துடன் இருந்தார். இன்று அவருக்கு வயது 45.
"எந்த வியாதியும் எனக்கு வந்ததில்லை. மற்றவர்களுக்கு ஜுரம் வந்தாலும் எனக்கு எதுவும் வராது. அப்படித்தான் நான் இருந்தேன் ஆனால் கடந்த இரண்டு வருடங்களாகத் திரும்பத் திரும்ப ஏதாவது ஒன்று எனது ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. மிகவும் சிரமப்படுகிறேன். மனம்தான் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள்..." மிகவும் உருக்கமாகச் சொன்னார்.