

மங்கையர் மலர் இதழில், 2019 ஆம் ஆண்டு, மன நல ஆலோசகர் விஜயலக்ஷ்மி பந்தையன் அவர்கள் 'நம் மனம் நம் கையில்’ என்ற தலைப்பில் கட்டுரைகளை தொடர்ந்து 15 வாரங்கள் எழுதினார். அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...
தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
கோபம் களைவோம்! - விஜயலக்ஷ்மி பந்தையன் - மன நல ஆலோசகர் Alpha Mind Trainer
நம் மனதின் சக்தி நமக்கே தெரிவதில்லை. அதை மட்டும் புரிந்துகொண்டு விட்டோமானால், வியப்பாகவும் இருக்கும், சிந்திக்கவும் வைக்கும்.
மஞ்சுளா சமையல் அறையில் அவசரமாக சமைத்துக்கொண்டிருந்தாள். உதடுகள் முணுமுணுத்தபடி இருந்தன. ஏதோ மந்திரம் ஜபிக்கிறாள் என்றுதானே நினைக்கிறீர்கள்? அதான் இல்லை. கணவரை சபித்துக்கொண்டிருந்தாள்!